ஆளுமை:பரமசாமி, சோமசுந்தரம்

நூலகம் இல் இருந்து
Thapiththa (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:52, 1 டிசம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=பரமசாமி| தந..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பரமசாமி
தந்தை சோமசுந்தரம்
பிறப்பு 1931.07.07
ஊர் இணுவில்
வகை கல்வியியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பரமசாமி, சோமசுந்தரம் (1931.07.07 - ) இணுவிலை பிறப்பிடமாகக் கொண்ட ஒரு கல்வியியலாளர். இவர் தனது ஆரம்பக் கல்வியை இணுவில் சைவப் பிரகாச வித்தியாசாலையில் பயின்றார். மேற்படிப்பை மெற்றாஸ் பச்சையப்பன் கல்லூரியில் கற்று விஞ்ஞானமாணி பட்டத்தைப் பெற்றுக் கொண்டார். இவர் பட்டதாரி மொழிபெயர்ப்பாளராக அரச சேவையில் இணைந்து கொண்டு முதலில் கணக்காய்வாளர் திணைக்களத்தில் பதவி பெற்று 1968ம் ஆண்டு தொடக்கம் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் கடமையாற்றி 1992ல் ஓய்வு பெற்றார்.

இலக்கியப் பணியில் தம்மை ஈடுபடுத்திக் கொண்ட இவர் "வீரசைவர் மரபியல்", "வள்ளுவர் வாய்மொழி", "சமய நோக்கில் தமிழ் இலக்கியச் சிந்தனைகள்" ஆகிய நூல்களை வெளியிட்டுள்ளார். மேலும் இணுவில் "அறிவாலயம்", "பொதுநூலகம்" ஆகியவற்றின் வளர்ச்சிக்காக நூல்கள் பலவற்றை அன்பளிப்பாக வழங்கியுள்ளார். இவர் கொழும்புத்தமிழ்ச் சங்கத்தினால் "சங்கச் சான்றோர்" விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.

வளங்கள்

  • நூலக எண்: 10858 பக்கங்கள் 13-14