ஆளுமை:ராஜகோபால், குமாரசாமி

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ராஜகோபால்
தந்தை குமாரசாமி
பிறப்பு
ஊர் வல்வெட்டி
வகை ஊடகவியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

குமாரசாமி ராஜகோபால் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த ஊடகவியலாளர். இவரது தந்தை குமாரசாமி. உடுப்பிட்டி அமெரிக்க மிஷன் கல்லூரி, ஸ்கந்தவரோதய கல்லூரிகளில் தமது கல்வியைக் கற்றவர். இளம் பராயத்திலேயே பத்திரிகையாளரானவர். விவேகி என்ற மாத சஞ்சிகையின் ஆசிரியராக பத்திரிகைத்துறையில் பிரவேசித்தவர். இவர் யாழ்ப்பாணத்தில் ஈழநாடு, கொழும்பில் தினகரன் என்று பத்திரிகைத்துறையில் நீண்ட அனுபவம் கொண்டவர். பாம - ராஜகோபால் என்ற பெயரில் கட்டுரைகள், விமர்சனங்கள், சிறுகதைகள் என எழுதியுள்ளார். ஈழகேசரி, மனம் பேசுகின்றது போன்ற சஞ்சிகைகளுக்கு ஆசிரியராக இருந்து வெளியிட்டிருக்கின்றார்.

மக்கள் பிரதமர் ஸ்ரீமா என்னும் நூலை எழுதி இருந்தவர். "வல்வை கப்பல் அமெரிக்க பயணம்" என்னும் தொடரை ஈழநாடு வார மலரில் தொடராக எழுதியவற்றையும், "ஆழிக்குமரன் ஆனந்தன்" ஆகிய இரு வரலாற்று நூல்களையும் தனித்தனியாகத் திரட்டியவர்.


வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 376-377
  • நூலக எண்: 4192 பக்கங்கள் 66-67