ஆளுமை:சிவ அன்பு, இராசாங்கம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சிவஅன்பு
தந்தை இராசாங்கம்
தாய் சிவயோகம்
பிறப்பு
ஊர் வல்வெட்டித்துறை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

இரா. சிவஅன்பு யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறையைச் சேர்ந்த கட்டிடக் கலைஞர்; மிகச் சிறந்த வைத்தியர். இவர் இவர் சிதம்பராக் கல்லூரியில் கற்றவர். ஆன்மீகத்திலும் மிகுந்த பற்றுடையவர். தனது சிறு வயது முதல் இயல், இசை, நாடகம் என்கின்ற மூன்றிலும் விற்பனராகத் திகழ்ந்தவர். தனது பேச்சு வன்மையால் அனைவரையும் கவர்ந்த இவர் தனது பதின்மூன்றாவது வயதிலேயே கதாப்பிரசங்கம் நடத்தத் தொடங்கி பார்த்தோரை வியக்க வைத்தவர். மருத்துவராக மானிப்பாய், திருகோணமலை, மாத்தளை, கெக்கிராவ என பல இடங்களில் பணியாற்றிய இவர் தான் பணியாற்றிய இடங்களில் எல்லாம் கதாப்பிரசங்கம் மூலமாக ஆன்மீகப் பணியும் ஆற்றிவந்தார். A-Grade என்று சொல்லப்படுகின்ற முதல்தரக் கலைஞராக இலங்கை வானொலி தீர்மானித்திருக்கும் இவருடைய கதாப்பிரசங்கங்கள் பல இப்பொழுதும் மறு ஒலிபரப்புச் செய்யப்படுகின்றன.

இந்த அரிய கலைஞருக்கு இந்து சமய கலாச்சார இராஜாங்க அமைச்சு கொழும்பில் 1993ம் ஆண்டு மாசி மாதம் நாடாத்திய பக்திப் பெருவிழாவில் திருமுருக கிருபானந்தவாரியார் அவர்களின் திருக்கரங்களாலேயே "அருட்கலைத் திலகம்" என்னும் பட்டத்தை வழங்கிக் கெளரவித்து குறிப்பிடத்தக்கது.

மேலும் இவருக்கு பல அமைப்புகள் "சாயிசாகரம்", "சிவநெறிச் செல்வர்", "கதாமிர்தபானு", "சிவத்திரு", "பிரசங்கமாமணி", "அன்பரசன்" போன்ற பட்டங்களுடன் இலங்கை கலாசார அமைச்சு 4.2.2004 கலாபூஷணம் என்னும் விருதும் வழங்கிக் கெளரவித்திருக்கின்றது.


வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 609-610
  • நூலக எண்: 4192 பக்கங்கள் 40