ஆளுமை:சிவ அன்பு, இராசாங்கம்

நூலகம் இல் இருந்து
Pilogini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:38, 1 டிசம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் (Pilogini பயனரால் ஆளுமை:சிவஅன்பு, இரா., ஆளுமை:சிவஅன்பு, இராசாங்கம் என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்ட...)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சிவஅன்பு, இரா.
தந்தை இராசலிங்கம்
தாய் சிவயோகம்
பிறப்பு
ஊர் வல்வெட்டித்துறை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

இரா. சிவஅன்பு அவர்கள் வல்வெட்டித்துறையைச் சேர்ந்தவர் மிகச் சிறந்த வைத்தியரும், ஆன்மீகத்திலும் மிகுந்த பற்றுடையவர். தனது சிறு வயது முதல் இயல், இசை, நாடகம் என்கின்ற மூன்றிலும் விற்பனராகத் திகழ்ந்தவர். தனது பேச்சு வன்மையால் அனைவரையும் கவர்ந்த இவர் தனது பதின்மூன்றாவது வயதிலேயே கதாப்பிரசங்கம் நடத்தத் தொடங்கி பார்த்தோரை வியக்க வைத்தவர். அந்தக் காலத்திலேயே திருமுருக கிருபானந்தவாரியார் அவர்களினால் கவரப்பட்டு அவரயே தனது மானசிகக் குருவாக வரித்து கொண்ட இந்த ஏகலைவக் கலைஞன் வசிட்டர் வாயால் பிரம்மரிசி என்ற வாழ்த்தினைப் பெற்றது போல பின்னர் கிருபானந்த வாரியார் அவர்களாலேயே பாராட்டப்பட்டு அவரின் முதன்மைச் சீடராகவும் மிளிர்ந்தார்.

மருத்துவராக மானிப்பாய், திருகோணமலை, மாத்தளை, கெக்கிராவ என பல இடங்களில் பணியாற்றிய இவர் தான் பணியாற்றிய இடங்களில் எல்லாம் கதாப்பிரசங்கம் மூலமாக ஆன்மீகப் பணியும் ஆற்றிவந்தார். A-Grade என்று சொல்லப்படுகின்ற முதல்தரக் கலைஞராக இலங்கை வானொலி தீர்மானித்திருக்கும் இவருடைய கதாப்பிரசங்கங்கள் பல இப்பொழுதும் மறு ஒலிபரப்புச் செய்யப்படுகின்றன இந்த அரிய கலைஞருக்கு இந்து சமய கலாச்சார இராஜாங்க அமைச்சு கொழும்பில் 1993ம் ஆண்டு மாசி மாதம் நாடாத்திய பக்திப் பெருவிழாவில் திருமுருக கிருபானந்தவாரியார் அவர்களின் திருக்கரங்களாலேயே "அருட்கலைத் திலகம்" என்னும் பட்டத்தை வழங்கிக் கெளரவித்து குறிப்பிடத்தக்கது.

மேலும் இவருக்கு பல அமைப்புகள் "சாயிசாகரம்", "சிவநெறிச் செல்வர்", "கதாமிர்தபானு", "சிவத்திரு", "பிரசங்கமாமணி", "அன்பரசன்" போன்ற பட்டங்களுடன் இலங்கை கலாசார அமைச்சு 4.2.2004 கலாபூஷணம் என்னும் விருதும் வழங்கிக் கெளரவித்திருக்கின்றது.


வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 609-610