ஆளுமை:பசுபதிராஜா, பத்மன்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பசுபதிராஜா
தந்தை பத்மன்
தாய் கதிராசிப்பிள்ளை
பிறப்பு
ஊர் நெடுந்தீவு
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பசுபதிராஜா, பத்மன் யாழ்ப்பாணம், நெடுந்தீவைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை பத்மன்; தாய் கதிராசிப்பிள்ளை. இவர் யாழ்ப்பாணம், நெடுந்தீவு மத்திய மகா வித்தியலயத்தில் கல்விப் பயின்றார். இலங்கையில் வெளிவந்த சுதந்திரன் பத்திரிகையில் 1980ஆம் ஆண்டு வெளிவந்த விடுதலைச் சுவடுகள் என்ற கட்டுரையே இவரது முதல் படைப்பாகும். மேலும் பல நாடகங்களையும் இலங்கையில் நடித்துள்ள இவரது முதலாவது நாடகம் சாவுமணி 1978ஆம் ஆண்டு நெடுந்தீவு மத்திய மகா வித்தியாலயத்தில் சரஸ்வதி அனுஸ்டான நாளின்போது மேடையேற்றப்பட்டது. புகலிடத்தில் விடிவின் வழி, விளக்கேற்றி வைக்கிறேன், ஆகிய நாடகங்களையும் எழுதி நடித்துள்ளார்.

சுமார் 50 சிறுகதைகளையும், 100 கவிதைகளையும், 20 கட்டுரைகளையும் இவர் எழுதியுள்ளார். 1977இல் இவர் எழுதிய செங்காற்று என்னும் கவிதைத் தொகுப்பு ஜேர்மனி எசன் நகரிலிருந்து வெளிவந்த தமிழருவி பத்திரிகையின் ஆண்டு விழாவில் வெளியிடப்பட்டது. அவ் விழாவில் இடம்பெற்ற கவிஞர்கள் கௌரவிப்பில் இவருக்கு தங்கப் பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.


வளங்கள்

  • நூலக எண்: 1856 பக்கங்கள் 48-50
  • நூலக எண்: 1855 பக்கங்கள் 88-90