ஆளுமை:பார்வதிநாதசிவம், மகாலிங்கசிவம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பார்வதிநாதசிவம்
தந்தை மகாலிங்கசிவம்
பிறப்பு 1936.01.14
இறப்பு 2013.03.05
ஊர் மாவிட்டபுரம்
வகை கவிஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பார்வதிநாதசிவம், மகாலிங்கசிவம் (1936.01.14 - 2013.03.05) யாழ்ப்பாணம், மாவிட்டபுரத்தைச் சேர்ந்த கவிஞர். இவரது தந்தை மகாலிங்கசிவம். தனது ஆரம்பக் கல்வியை வீமன்காமம் மகா வித்தியாலயத்திலும் இடைநிலைக் கல்வியை தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியிலும் கற்று யாழ்ப்பாணம், மருதனார்மடம் இராமநாதன் கல்விக்கழகத்தில் ஆசிரியர் பணியை ஆரம்பித்து கண்டி புனித அந்தோனியார் கல்லூரி உட்பட நாட்டின் பல பாடசாலைகளில் பணியாற்றினார். 1955ஆம் ஆண்டு முதல் இலக்கியப் பணியை ஆரம்பித்த இவர் தென்னிந்திய அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கற்று, புலவர் பட்டம் பெற்றார்.

இவர் சுதந்திரன், ஈழநாடு, உதயன், முரசொலி ஆகிய பத்திரிகைகளில் பணியாற்றியுள்ளார். இவர் காதலும் கருணையும், இருவேறு உலகம், இரண்டு வரம் வேண்டும், இன்னும் ஒரு திங்கள், பசிப்பிணி மருத்துவன், மானங்காத்த மறக்குடிவேந்தன், தமிழ்ச்செல்வம் ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.

வித்துவசிரோன்மணி பொன்னம்பலம் பிள்ளையிடம் உரையாசிரியர் என்ற பட்டத்தை பெற்ற இவர் அமரரான சிவத்தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களால் இலக்கிய மேதை எனும் பட்டதையும் பெற்றுக் கொண்டார். இவற்றுடன் கலாபூஷணம், ஆளுநர் விருதுகளையும் பெற்றார்.


இவற்றையும் பார்க்கவும்


வெளி இணைப்புக்கள்


வளங்கள்

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 20
  • நூலக எண்: 13844 பக்கங்கள் 122-125