ஆளுமை:சண்முகதாஸ், அருணாசலம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சண்முகதாஸ், அருணாசலம்
தந்தை அருணாசலம்
தாய் முத்தம்மாள்
பிறப்பு 1910.02.01
ஊர் திருகோணமலை
வகை கல்வியியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அ.சண்முகதாஸ் (1910.02.01 - ) திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் திருநெல்வேலியை வாழ்விடமாகவும் கொண்ட கல்வியியலாளர், எழுத்தாளர். இவரது தந்தை அருணாசலம்; தாய் முத்தம்மாள். இவர் தனது இளமைக் கல்வியை திருகோணமலையில் உள்ள பிரான்சிஸ் சேவியர் பள்ளியிலும், பின்னர் வந்தாறுமூலையில் (செங்கலடி) உள்ள அரசு கல்லூரியிலும், பின்னர் சிவானந்த வித்தியாலயத்திலும் பயின்றார். இவர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைமாணி சிறப்பு பட்டம் பெற்றதோடு ஐக்கிய இராச்சியத்தின் எடின்பரோ பல்கலைக்கழகத்தில் மொழியியல் பட்டத்தையும், கலாநிதிப்பட்டத்தையும் பெற்றார்.

பேராதனை, யாழ்ப்பாணம் ஆகிய பல்கலைக்கழகங்களில் விரிவுரையாளராக, பேராசிரியராக முதுநிலைப் பேராசிரியராக பணியாற்றிய இவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடாதிபதியாக, பதில் துணைவேந்தராக பணியாற்றியுள்ளார். நைஜீரியா இபாடன் பல்கலைக்கழகம், ஜப்பான் கச்சுயின் பல்கலைக்கழகம், மலாயா பல்கலைக்கழகம் ஆகிய வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் வருகைதரு பேராசிரியராகவும் பணியாற்றியுள்ளார். இவர் பல்கலைக்கழக மானியங்கள் ஆனைக்குழுவால் யாழ் பல்கலைக்கழக உயர் பட்டப்படிப்புக்கள் பீடத்தின் முதல் பீடாதிபதியாக நியமிக்கப்பட்டவர். யாழ்.பல்கலைக்கழக ஊடக வளங்கள் பயிற்சி நிலையத்தின் முதல் இயக்குநராகவும் சைவ வித்தியாவிருத்திச் சங்கத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.

எழுத்துலகில் தமிழ்மொழி இலக்கண இயல்புகள், கிறீஸ்தவ தமிழ் இலக்கிய வளர்ச்சி, இலங்கை பேராசிரியர்களின் தமிழ்ப்பணி, தமிழின் பா வடிவங்கள், மொழியும் பிற துறைகளும், ஆக்க இலக்கியமும் அறிவியலும், துணைவேந்தர் வித்தியானந்தன், கிறீஸ்தவத் தமிழ் இலக்கிய வளர்ச்சி முதலான நூல்களை ஆக்கியுள்ளார்.

சண்முகதாஸ் அவர்கள் படிக்கும் காலத்திலும் பணிபுரிந்த காலத்திலும் பல விருதுகளையும், பரிசுகளையும் வாங்கிப் பெருமை சேர்த்தவர். 1963 இல் ஆறுமுகநாவலர் விருதினை இலங்கைப் பல்கலைக் கழகத்தில் முதல் மாணவராகத் தேறிப் பெற்றதோடு 1987 இல் கொழும்புத் தமிழ்ச்சங்கத்தில் தமிழ்மொழி இலக்கண இயல்புகள் என்ற தம் நூலுக்காகச் சபாரத்தினம் நினைவுப்பரிசும் பெற்றார். மேலும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இருபத்தைந்தாண்டுகள் தொடர்ந்து பணிபுரிந்தமைக்கு இரண்டு முறை பணப் பரிசு பெற்றவர். யுனெஸ்கோ விருதினையும், இலங்கை அரசின் சாகித்ய ரத்னா விருதினையும் பெற்றுள்ளதோடு யாழ்ப்பாண பல்கலைக்கழக தகைசார் பேராசிரியராகவும் தென்கிழக்கு பல்கலைக்கழக மொழித்துறை நிபுணத்துவ ஆலோசகராகவும் இருந்துவருகின்றார்.

இவற்றையும் பார்க்கவும்


வெளி இணைப்புக்கள்

வளங்கள்

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 68
  • நூலக எண்: 13844 பக்கங்கள் 86-89