ஆளுமை:பெஞ்சமின் செல்வம், மரிசாற்பிள்ளை

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பெஞ்சமின் செல்வம்
தந்தை மரிசாற்பிள்ளை
பிறப்பு 1906.03.24
ஊர் நானாட்டான், மன்னார்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பெஞ்சமின் செல்வம், மரிசாற்பிள்ளை (1906.03.24 - ) மன்னார், நானாட்டானைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை மரிசாற்பிள்ளை. இவர் தனது இளமைக் கல்வியை தனது தந்தையிடம் கற்று, பின்னர் ஆரிய திராவிட பாஷா அபிவிருத்திச் சங்கத்தின் சார்பில் சுன்னாகத்தில் நடாத்தப்பட்ட பால பண்டிதர் வகுப்பில் 24ஆவது வயதில் சேர்ந்து புன்னாலைக்கட்டுவன் கணேசையரிடத்தில் கற்றார்

இவர் ஏட்டுச்சுவடிகளாய் இருந்த மன்னார் நாட்டுக்கூத்துப் புலவர் கீத்தாம்பிள்ளை எழுதிய கென்ரிக்கெம்பரதோர் தன்னுடைய தகப்பனார் எழுதிய ஞானசௌந்தரி புலவர் பெயர் தெரியாத மூவி ராசாக்கள் நாடகம் என்பவற்றை ஆராய்ந்து, தொகுத்து, எழுத்துப் பிழைகளைத் திருத்தி கையெழுத்துப் பிரதிகளாக திருத்யமைத்தார்.

இவரது செயல்திறனை பாரட்டி இலங்கை கலாசாரப் பேரவை 1972ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் நடத்திய சாகித்திய மண்டல விழாவில் கௌரவித்து பரிசளித்ததோடு மன்னார் மாவட்ட மக்கள் சார்பில் முசலிக் கலாசாரச் சபைத் தலைவர் வை. சொக்கலிங்கம் அவர்களின் தலைமையில் நானாட்டானில் 1972.02.19ஆம் திகதி பாராட்டு விழாவும் நடைப்பெற்றது.

வளங்கள்

  • நூலக எண்: 13844 பக்கங்கள் 58-60