ஆளுமை:பெஞ்சமின் செல்வம், மரிசாற்பிள்ளை

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:00, 24 நவம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=பெஞ்சமின் ச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பெஞ்சமின் செல்வம்
தந்தை மரிசாற்பிள்ளை
பிறப்பு 1906.03.24
ஊர் நானாட்டான், மன்னார்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பெஞ்சமின் செல்வம், மரிசாற்பிள்ளை (1906.03.24 - ) மன்னார், நானாட்டானைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை மரிசாற்பிள்ளை. இவர் தனது இளமைக் கல்வியை தனது தந்தையிடமும், பின்பு தமிழை ஐயந்திரிபறக் கற்க வேண்டுமென்று விரும்பி ஆரிய திராவிட பாஷா அபிவிருத்திச் சங்கத்தின் சார்பில் சுன்னாகத்தில் நடத்தப்பட்ட பால பண்டிதர் வகுப்பில் 24ஆவது வயதில் சேர்ந்தார். அப்போது அவருக்கு புன்னாலைக்கட்டுவனைச் சேர்ந்த கணேசையரே தமிழ் கற்பித்தார்.

இவர் தனது படிப்பை முடித்ததும் தமிழ் வளர்க்கும் பணியில் ஈடுபட்டார். மன்னார் மாவட்டத்து சிறந்த நாட்டுக்கூத்துப் புலவராகிய திரு. கீத்தாம்பிள்ளை எழுதிய கென்ரிக்கெம்பரதோர் தன்னுடைய தகப்பனார் எழுதிய ஞானசௌந்தரி புலவர் பெயர் தெரியாத மூவி ராசாக்கள் நாடகம் என்பன அக் காலத்து ஏட்டுப் பிரதிகளாகவே இருந்தன. அவை எழுத்து வாசிக்க முடியமலும், குற்ருக்கள், முற்றுத்தரிபுக்கள் இல்லாமலும் ஓலையில் உக்கி அழிவுறும் தருவாயில் இருந்தன. அவற்றை ஒவ்வொன்றாக எடுத்தும், தொகுத்தும், ஆராய்ந்தும், எழுத்துப் பிழைகளைத் திருத்தியும் கையெழுத்துப் பிரதிகளாக பல காலம் பாடுபட்டு திருத்தி முடித்தார்.

இவரது செயல்திறனை மெச்சி, இலங்கை கலாசாரப் பேரவையினர் 1972ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் நடத்திய சாகித்திய மண்டல விழாவில் கௌரவித்து பரிசளித்தனர். இதனைப் பாராட்டும் முகமாக மன்னார் மாவட்ட மக்கள் சார்பில் முசலிக்காரியதிகாரி பிரிவு கலாசாரச் சபைத் தலைவர் காரியதிகாரி, திரு.வை. சொக்கலிங்கம் அவர்களின் தலைமையில் நானாட்டானில் 1972.02.19ஆம் திகதி ஒரு பாராட்டு விழாவும் நடைப்பெற்றது.

வளங்கள்

  • நூலக எண்: 13844 பக்கங்கள் 58-60