ஆளுமை:ஜின்னாஹ் ஷரிபுத்தீன், ஆ. மு. ஷரிபுத்தீன்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:24, 24 நவம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்= ஜின்னாஹ் ஷ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ஜின்னாஹ் ஷரிபுத்தீன், ஏ.‎
தந்தை ஆ.மு.ஷரிபுத்தீன்
பிறப்பு
ஊர்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஜின்னாஹ் ஷரிபுத்தீன் ஓர் எழுத்தாளர். இவரது தந்தை ஆ.மு.ஷரிபுத்தீன். கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் இலக்கியச் செயலாளராகப் பணியாற்றிய இவர் இதன் துணை தலைவராகவும் கடமையாற்றியுள்ளார். இவர் தனது தந்தையிடம் கவிதை இலக்கணங்களை முறையாகக் கற்றுக் கொண்டார். நூல் வடிவில் இவரது படைப்புக்கள் பதினான்கு வெளிவந்துள்ளன.

இவர் மஹ்ஜபீன் காவியம், புனித பூமியிலே காவியம் இரண்டையும் ஆய்வு செய்து கவிமாமணி அகளங்கன் முன்னைய இலக்கியங்களோடு ஒப்பாய்வு செய்து ஒரு ஆய்வு நூலையும் வெளியிட்டுள்ளார். நூல் வடிவில் இவரது ஆக்கங்கள் பதினான்கு வெளிவந்துள்ளன. ஆனபோதும் அகில இலங்கை ரீதியாக பதினான்குக்கு அதிகமான பரிசுகளைப் பெற்றுள்ளார். இவரின் பண்டார வன்னியன் காவியம் 2005ஆம் ஆண்டுக்கான தேசிய சாகித்திய மண்டலப் பரிசு, கொழும்புத் தமிழ்ச் சங்கப் பரிசு,, யாழ்ப்பாண இலக்கிய வட்டப் பேரவையின் இலங்கை இலக்கியப் பேரவைப் பரிசு ஆகிய மூன்று பரிசுகளையும் பெர்றுள்ளது.

இவற்றையும் பார்க்கவும்


வளங்கள்

  • நூலக எண்: 13958 பக்கங்கள் 217-219