ஆளுமை:மாத்தளை அருணேசர்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் அருணாசலம்
பிறப்பு 1905.30.05
இறப்பு 1986.05.03
ஊர் கேகாலை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அருணாசலம், அ. ச. (1905.30.05 - 1986.05.03) மாத்தளை அருணேசர் எனும் பெயரில் அறியப்பட்டவர்; கேகாலை மாவட்டம், சன்னிகிராப்ட் என்னும் இறப்பர் தோட்டத்தில் பிறந்த எழுத்தாளர். இவர் இலங்கையிலும் தமிழ்நாட்டிலும் கல்வி பயின்று இலங்கையின் மலையகத்தில் தேயிலை, இறப்பர் தோட்டங்களிலும், பின்னர் இலங்கை அரச நெல் கொள்வனவுச் சபையிலும் பணியாற்றி 1964இல் ஓய்வு பெற்றார்.

தமிழகத்தின் லோகோபகாரி, ஆனந்தப் போதினி, அமிர்குணபோதினி, கலைக்கதிர், கலைமகள், மஞ்சரி ஆகிய இதழ்களிலும் இலங்கையின் தேசபக்தன், வீரகேசரி, தினகரன், ஆத்மஜோதி, தினபதி, சிந்தாமணி போன்ற இதழ்களிலும் இவரது ஆக்கங்கள் வெளியாகின. நவரத்தினங்கள் பற்றிய நூலை சென்னை அமுதா நிலையத்தினூடாக ஒன்பது மணிகள் என்ற பெயரில் நூலாக 1962ஆம் ஆண்டில் வெளியிட்டார்.

1983 இனக்கலவரத்தில் பாதிக்கப்பட்டு மாத்தளையிலிருந்து மட்டக்களப்புக்கு இடம்பெயர்ந்து வாழ்ந்து 80ஆவது அகவையில் காலமானார்.

வெளி இணைப்புக்கள்

வளங்கள்

  • நூலக எண்: 13844 பக்கங்கள் 34-35