ஆளுமை:திருஞானசம்பந்தன், கந்தையா
பெயர் | திருஞானசம்பந்தன் |
தந்தை | கந்தையா |
தாய் | இராசமணி |
பிறப்பு | 1913.10.20 |
இறப்பு | 1955.01.07 |
ஊர் | திருநெல்வேலி |
வகை | எழுத்தாளர், கவிஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
திருஞானசம்பந்தன், கந்தையா (1913.10.20 - 1955.01.07 ) யாழ்ப்பாணம், திருநெல்வேலியைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை கந்தையா; தாய் இராசமணி. பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளையிடம் கல்வி கற்று பின் ஆசிரியப் பணியில் ஈடுபட்டார்.
தனது இருபத்தைந்தாவது வயதில் எழுத்துலகில் நுழைந்த இவர் 139ஆம் ஆண்டு கலைமகள் சஞ்சிகையில் "தாராபாய்" என்ற தனது முதலாவது சிறுகதையை எழுதியிருந்தார். தொடர்ந்து இருபது வரையான சிறுகதைகளை எழுதியுள்ளார். விதி, புத்தரின் கண்கள், கூண்டுக்கிளி, தூமகேது, மகாலச்சுமி, மனித வாழ்க்கை, சபலம், மனிதன், சலனம், மதம், துறவு, ஆகியன இவரது சிறுகதைகளில் சிலவாகும். இவை கலைமகள், கிராம ஊழியன், ஈழகேசரி, மறுமலர்ச்சி முதலான பத்திரிகைகளில் பிரசுரமாகியுள்ளன. இவர் 'பாசம்' என்ற நவீன உரைநடை நாவலையும் சாகுந்தல காவியம் என்ற கவிதை நூலையும் ஆக்கியுள்ளார்.
இவரது சிறுகதைகள் தொகுக்கப்பட்டு ”சம்பந்தன் சிறுகதைகள்” என்ற பெயரில் 1998ல் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வெழுத்தாளரின் ஞாபகார்த்தமாக யாழ் இலக்கிய வட்ட அனுசரணையுடன் வருடாவருடம் சிறந்த ஆய்வு நூலுக்கான ”சம்பந்தன் விருது” வழங்கப்பட்டு வருகிறது.
வெளி இணைப்பு
வளங்கள்
- நூலக எண்: 13844 பக்கங்கள் 17-20