ஆளுமை:பஞ்சாட்சர சர்மா, சபாபதி ஐயர்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 11:31, 22 நவம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=பஞ்சாட்சர ச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பஞ்சாட்சர சர்மா
பிறப்பு 1916.11.13
ஊர் கோப்பாய்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


பஞ்சாட்சரசர்மா (1916.11.13 - ) யாழ்ப்பாணம் கோப்பாயைச் சேர்ந்த எழுத்தாளர். இவர் தனது ஆரம்பக் கல்வியை தனது சொந்த ஊரில் ஜம்புகேஸ்வரக் குருக்கள் என்பவரின் கோவிற் பாடசாலையில் பெற்ற பின் சுன்னாகம் பிராசீன பாடசாலையில் நாவலர் மரபில் வந்த நல்மணியாம் வித்துவான் சி.கணேசையரிடம் தமிழும் கற்றுக்கொள்ள ஆரம்பித்தார். 1933ஆம் ஆண்டில் பிரவேச பண்டித பரிட்சையிலும் 1934ஆம் ஆண்டில் பிரவேச பண்டித பரீட்சையிலும் சித்திப் பெற்றார்.

ஆசிரியத் தொழிலை விரும்பி ஏற்ற இவர் இந்து சமய பாடநூல் எழுதியும் இந்தியாவிலிருந்து வடமொழிப் பரீட்சை நடத்தும் பிரபல ஸ்தாபனங்கள் மூலம் சமஸ்கிருத பரீட்சைகள் நடத்தியும் வந்தார். 1939இல் அதாவது தமது இருபத்து மூன்றாவது வயதில் இலங்கை விகடன் பத்திரிகை மூலம் எழுத்துலகில் பிரவேசித்த இவர் ஈழகேசரி, ஆனந்தன், கலைச்செல்வி, நவசக்தி, வீரசக்தி, கலாமோகினி, பாரததேவி, காந்தியம், ஈழநாடு போன்ற பல புனைப்பெயர்களிலும் கட்டுரைகள், விமர்சனங்கள், மொழிப்பெயர்ப்புக்கள் போன்றவற்றை எழுதியுள்ளார்.

வடகோவைவாணன், பரம், நச்சினாக்கினியன், பாரத்ஜென், வாத்தியார், அக்ஷ்ரம், இரட்டையர்கள் ஆகியன இவர் உலவி வந்த புனைப்பெயர்களாகும். பல வடமொழி நூல்களின் பதிப்பாசிரியராகவும், மூன்று பாராட்டு விழா மலர்களுக்கு தொகுப்பாசிரியராகவும் இவர் பணியாற்றியிருக்கின்றார். வானொலிப் பேச்சுக்கள், சைவநற்சிந்தனைகள் முதலியவற்றை இவர் வழங்கியதுடன் இடைகிடையே சமயப் பேச்சுக்களையும் நிகழ்த்தியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 13844 பக்கங்கள் 36-39
  • நூலக எண்: 1012 பக்கங்கள்