ஆளுமை:தாவீது அடிகள், தாவீது

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 09:09, 22 நவம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=தாவீது அடிக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் தாவீது அடிகள்
தந்தை தாவீது
தாய் எலிசெபத்து
பிறப்பு 1908
ஊர் தும்பளை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

வண.பிதா தாவீது அடிகள் (1908 - ) தும்பளையைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை தாவீது; தாய் எலிசெபத்து. இவர் தனது ஆரம்பக் கல்வியை சம்பத்தரிசியார் கல்லூரியில் பயின்று பின் யாழ்ப்பாணக் குருமடத்தில் சேர்ந்தார். 1932ஆம் ஆண்டு மார்கழி மாதம் 22ஆம் நாள் குரு நிலையில் நெறிப்படுத்தப்பட்டார். ஒரு சில ஆண்டுகள் யாழ்ப்பாணக் குருமடத்திலேயே கல்வி கற்று பின் ஏறத்தாழ ஐந்து ஆண்டுகள் இங்கிலாந்து, இத்தாலி, ஜேர்மனி, இந்தியா முதலிய பல நாடுகளுக்கும் சென்று பல்கலைக்கழகங்களில் கற்றார். மேலும் சம்பத்தரிசியார் கலூரியில் ஆசிரியராகவும் கடமையாற்றியுள்ளார்.

ஞானப்பிரகாசம் சுவாமி தொடக்கி வைத்த சொற்பிறப்பு ஒப்பியல் தமிழ் அகராதியை லீலா காதை என்ற ஆராய்ச்சித் தலைப்புடன் எழுதி வெளியிட்டுள்ளார்.


வளங்கள்

  • நூலக எண்: 13844 பக்கங்கள் 31-33