ஆளுமை:செல்வநாயகம், வினாசித்தம்பி
பெயர் | செல்வநாயகம் |
தந்தை | வினாசித்தம்பி |
தாய் | அலங்காரம் |
பிறப்பு | 1907.01.11 |
ஊர் | கொழும்புத்துறை |
வகை | கல்வியியலாளர், எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
செல்வநாயகம், வினாசித்தம்பி (1907.01.11 - ) யாழ்ப்பாணம் கொழும்புத்துறையைச் சேர்ந்த கல்வியியலாளர், எழுத்தாளர். இவரது தந்தை வினாசித்தம்பி; தாய் அலங்காரம். இவர் தனது ஆரம்பக் கல்வியையும், இடைநிலைக் கல்வியையும் யாழ்ப்பாணம் புனித ஜோன்ஸ் கல்லூரியிலே கற்றார். பின்னர் கொழும்பு பல்கலைக்கழக கல்லூரியிலே சேர்ந்து படித்து, லண்டன் பல்கலைக்கழகம் நடத்திய பரீட்சைகளில் தேறிக் கலைமாணிப் பட்டம் பெற்றார். பின்னர் இடைக்காடு இந்துக் கல்லூரியில் ஆசிரியராகவும், கோப்பாய் ஆசிரியப் பயிற்சிக் கலாசாலையில் விரிவுரையாளராகவும் கடமையாற்றிக்கொண்டிருந்த வேளையில் 1924ஆம் ஆண்டு இலங்கைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் விரிவுரையாளராக நியமனம் பெற்றார். பின்னர் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் சென்று முதுமாணிப்பட்டம் பெற்று திரும்பினார்.
இவர் அரசியல் வரலாற்று அடிப்படையிலான தமிழ் இலக்கிய வரலாற்று நூல் ஒன்றினை எழுதியுள்ளார். மேலும் இவர் ஆங்கிலத்தில் எழுதிய சிலப்பதிகாரம், மணிமேகலையின் காலம், என்ற கட்டுரை யூனுவசிற்றி ஒஃப் சிலோன் றிவியூ என்ற சஞ்சிகையில் 1948ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. மலேசியாவில் 1966இல் நடைபெற்ற முதலாவது தமிழாராய்ச்சி மாநாட்டுக்கு அவர் சமர்பித்த தொல்காப்பிய ஆராய்சியில் தோன்றும் சில பிரச்சினைகள் என்ற கட்டுரை அவரது கருத்துக்கள் சிலவற்றை எடுத்து ஆராய்கின்றன.
வளங்கள்
- நூலக எண்: 13844 பக்கங்கள் 22-27
- நூலக எண்: 3783 பக்கங்கள்