ஆளுமை:செல்லத்துரை, சுப்பிரமணியம்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:19, 22 நவம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=செல்லத்துர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் செல்லத்துரை, சுப்பிரமணியம்
தந்தை சுப்பிரமணியம்
தாய் தங்கமுத்து
பிறப்பு 1909
இறப்பு 1968
ஊர் குப்பிளான்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

செல்லத்துரை, சுப்பிரமணியம் (1909- 1968) யாழ்ப்பாணம், குப்பிளானைச் சேர்ந்த பண்ணிசைக் கலைஞர். இவரது தந்தை சுப்பிரமணியம்; தாய் தங்கமுத்து. சங்கானை நாகலிங்க சுவாமிகளிடம் பண்ணிசையினைப் பயின்றவர் மேற்படிப்புக்காக மலேசியா சென்று தொடர்ந்தும் பண்ணிசையைப் பயின்று இந்தியாவில் திருவையாறு தேவாரப் பாடசாலையில் தேவார இசையினைப் பயின்றார். அத்துடன் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இசைப் பயின்று பட்டம் பெற்றார்.

இவருக்குப் வயலின் வைத்தீஸ்வர ஐயர், புல்லாங்குழல் மூர்த்தி ஐயர், மிருதங்கம் தங்கம், எம். என். செல்லத்துரை ஆகிய வித்துவான்கள் பக்கவாத்தியம் வாசித்துள்ளார்கள். இவர் தயாரித்த சமயம் சம்பந்தமான நாடகங்களுள் சிறுதொண்டர் சாவித்திரி சத்தியவான், வேதாள உலகம், மார்க்கண்டேயர் போன்றவை சிறப்பானவைகளாகும். இதனடிப்படையில் இவருக்கு சிறுதொண்டர் எனும் பட்டப்பெயரும் வழங்கப்படலாயிற்று. மேலும் தூத்துகுடியில் நடைப்பெற்ற திருமுறை விழாவில் இவருக்கு தங்கப்பதக்கமும் இசைவல்லார் என்னும் சிறப்புப் பட்டமும் கிடைக்கப்பெற்றுள்ளது.


வளங்கள்

  • நூலக எண்: 7474 பக்கங்கள் 116-118