ஆளுமை:ராஜரத்தினம், வெங்கடாசலம்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:47, 22 நவம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=ராஜரத்தினம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ராஜரத்தினம்
தந்தை வெங்கடாசலம்
தாய் நாகம்மா
பிறப்பு 1931.04.13
இறப்பு 1990.12.26
ஊர் மல்லாகம்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ராஜரத்தினம், வெங்கடாசலம் (1931.04.13 - 1990.12.26) யாழ்ப்பாணம், மல்லாகத்தைச் சேர்ந்த கலைஞர். இவரது தந்தை வெங்கடாசலம்; தாய் நாகம்மா. இவர் தனது ஆரம்பக் கல்வியை சுன்னாகம் மயிலணிப் பாடசாலையிலும், மேல் வகுப்புக்களை தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியிலும் பயின்றார். பின் இந்தியா சென்று கேரள மாநிலத்தில் கதகளி நாட்டியத்தை குரு கோபிநாத் அவர்களிடமும், பரதக்கலையை தமிழ் நாட்டில் ராமசாமி என்பவரியமும் கற்றுக் கொண்டார்.

தெல்லிப்ழை மகாஜனக் கல்லூரியில் நடன ஆசிரியராக கடமையாற்றிய இவர் மேலும் சமீபமாகவுள்ள மல்லாகம் மகாவித்தியாலயம், அளவெட்டி அருணோதயக் கல்லூரி, ஏழாலை மகாவித்தியாலயம், கீரிமலை நகுலேஸ்வராக் கல்லூரி ஆகிய பாடசாலைகளில் பகுதி நேர நடன ஆசிரியராகவும் கடமையாற்றி வந்தார்.

இவரது நாட்டியக் கலையின் சேவையினைப் பாராட்டி அளவெட்டி ஶ்ரீ நாகவரத நாராணர் தேவஸ்தானத்தில் அருட்கவி சீ.வீனாசித்தம்பி அவர்களால் நாட்டியகேசரி பட்டமும், ஈழத்தின் கலாரசிகர்களால் நாட்டிய கலாரத்தினம் என்ற பட்டமும் வழங்கப்பட்டுள்ளன.


வளங்கள்

  • நூலக எண்: 7474 பக்கங்கள் 110-112