ஆளுமை:சங்கரசிவம், கந்தையா

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 12:51, 21 நவம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=சங்கரசிவம்|..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சங்கரசிவம்
தந்தை கந்தையா
பிறப்பு 1939.06.15
இறப்பு 1988.05.17
ஊர் இணுவில்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சங்கரசிவம், க. (1939.06.15- 1988.05.17) யாழ்ப்பாணம், இணுவிலைச் சேர்ந்த மிருதங்க இசைக் கலைஞர். இவரது தந்தை கந்தையா. இவர் தனது ஆரம்பக்கல்வியை 1944 முதல் க.பொ.த வரையும் இணுவில் சைவப்பிரகாச வித்தியாலயத்தில் 1956 வரை பயின்றார். இதன் பயனாக இவர் ஒரு உதவி ஆசிரியராக 1960ஆம் ஆண்டு அரசாங்க பாடசாலையில் நியமனம் பெற்றார். 1977ஆம் ஆண்டு தொடக்கம் 1988ஆம் ஆண்டு வரை செயன்முறை பரீட்சைகராகவும், வினாப் பத்திரம் தயாரிப்பாளராகவும், மீளாய்வுக் குழுவினராகவும் இவர் கடமையாற்றினார்.

இவருடைய ஆரம்ப மிருதங்க வித்துவான் காலஞ்சென்ற அம்பலவாணர் ஆவார். மேலும் மிருதங்க வித்துவான்களான சின்னராஜா, ஏ. எஸ். ராமநாதன், எம். என். செல்லத்துரை ஆகியோர்களிடமும் இக் கலையைப் பயின்றார். இவரது மிருதங்க அரங்கேற்றம் 1972ஆம் ஆண்டு நடைப்பெற்றதோடு இக் காலங்களிலேயே வட இலங்கைச் சங்கீத சபை பரீட்சைகளுக்கும் தோன்றி 1976ஆம் ஆண்டு மிருதங்க ஆசிரியர் தராதரம் பெற்றார். இவருடைய மிருதங்க வாசிப்பு பாடகர்களுக்கோ, வாத்தியக்கலைஞர்களுக்கோ இடையூறு இன்றியதாக இருக்கும். இவரது கலைத்தொண்டில் விசேடமானது இவர் 1979ஆம் ஆண்டு மிருதங்க சுருக்க விளக்கம் என்னும் நூல் வெளியிட்டமையாகும்.


வளங்கள்

  • நூலக எண்: 7474 பக்கங்கள் 91-92