ஆளுமை:கோவிந்தசாமி, இரத்தினம்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 12:00, 21 நவம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=கோவிந்தசாம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கோவிந்தசாமி
தந்தை இரத்தினம்
தாய் பாக்கியம்
பிறப்பு 1927.09.18
இறப்பு 1988
ஊர் இணுவில்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கோவிந்தசாமி, இ. (1927.09.18 - 1988) யாழ்ப்பாணம், இணுவிலைச் சேர்ந்த நாதஸ்வர இசைக் கலைஞர். இவரது தந்தை இரத்தினம்; தாய் பாக்கியம். இவர் சிறு பராயத்தில் இணுவில் சைவப்பிரகாச வித்தியாசாலையில் கல்வி பயின்றார். இந்தியா சென்று தமிழ்நாடு தருமபுரம் நாதஸ்வர வித்துவான் அபிராம சுந்தரம் பிள்ளையிடம் முறையே நாதஸ்வர இசையைப் பயின்றார்.

இவருடைய நாதஸ்வர இசையானது இராக விஸ்தாரம் நிறைந்ததாகவும், சுருதிலயம் சுத்தமானதாகவும், நிறைந்த சங்கதிகள், பிர்காக்கள் அடங்கியதாகவும் இரசிகர்களை உற்சாகமூட்டக் கூடியதாகவும் அமைந்திருந்தது. இவர் பெரும்பாலும் தோடி, கல்யாணி, சங்கராபரணம், சகானா போன்ற இராகங்களையே இராக ஆலாபனைக்கு எடுத்து நீண்ட நேரம் வாசிப்பார்.

இவருக்கு உடுவில் ஶ்ரீ சிவஞானப்பிள்ளையார் ஆதீனம் சிவஞானவாரியம், லயநாதவாரிதி என்னும் சிறப்புப் பட்டமளித்து கௌரவித்தது.

வளங்கள்

  • நூலக எண்: 7474 பக்கங்கள் 73-76