ஆளுமை:திருநாவுக்கரசு, முத்தையாபிள்ளை

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 10:01, 21 நவம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=திருநாவுக்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் திருநாவுக்கரசு
தந்தை முத்தையாபிள்ளை
தாய் அன்னலட்சுமி
பிறப்பு 1920
இறப்பு 1960
ஊர் சீர்காழி
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

திருநாவுக்கரசு, மு. (1920.1960) தமிழ்நாடு, சீர்காழியைச் சேர்ந்த நாதஸ்வரக் கலைஞர். இவரது தந்தை; முத்தையாபிள்ளை; தாய் அன்னலட்சுமி. இவர் சிறுவயதிலேயே இசை ஆர்வமுடையவராய் வாய்ப்பாட்டு, நாதஸ்வரம் ஆகிய இசைக் கலைகளை நன்கு கற்றுக் கொண்டார்.

இவரது இசை நுட்ப்பத்திறனைக் அறிந்த ஈழத்துச் சித்தன்கேணியைச் சேர்ந்த தவில் வித்துவான் கோதண்டபாணி அவர்கள் இவரை ஈழத்தில் நாதஸ்வர இசைச் சேவைக்காக இங்கு அழைத்து பல இடங்களிலும், இந்து ஆலயங்கள் தோறும் மங்கல இசை அரங்குகளிலும் பங்கு பற்றச் செய்ததுடன் இந்துக்களின் மங்கல நிகழ்ச்சிகளுக்கும் நாதஸ்வர இசைச் சேவையைச் செய்ய சந்தர்ப்பங்களை அளித்தார். இவர் பல காலம் தவில், நாதஸ்வர இசைக் கலைஞர்கள் சூழ்ந்து வாழ்ந்த அளவெட்டி எனும் ஊரிலேயே வசித்து வந்தார்.

வளங்கள்

  • நூலக எண்: 7474 பக்கங்கள் 58-60