ஆளுமை:வசந்தகுலசிங்கம், ஜி. எஸ்.

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 09:29, 21 நவம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=வசந்தகுலசி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் வசந்தகுலசிங்கம்
பிறப்பு 1917.07.28
இறப்பு 1985
ஊர் ஆனைக்கோட்டை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

வசந்தகுலசிங்கம், ஜி. எஸ். (1917.07.28 - 1985) யாழ்ப்பாணம், ஆனைக்கோட்டையைச் சேர்ந்த புல்லாங்குழல் இசைக் கலைஞர். இவர் தனது கல்விப் படிப்புடன் சமகாலத்திலேயே புல்லாங்குழல், கிளாரினட், தபேலா, வீணை ஆகிய வாத்திய இசைகளையும், வாய்ப்பாட்டு இசை, நாட்டிய இசை ஆகியவற்றையும் உரிய முறையில் பயின்றார். 1949ஆம் ஆண்டளவில் பரமேஸ்வராக் கல்லூரியில் ஆசிரியராக கடமையாற்றினார்.

தனது இசைப் பயிற்சிகளுடன் ஹிந்துஸ்தானி இசையிலும் நல்ல ஆர்வமுள்ளவராக விளங்கிய இவர் புல்லாங்குழலில் கர்நாடக இசையுடன் ஹிந்துஸ்தான் இசையையும் வழங்கி வந்துள்ளார். இவருடைய இசைத் திறமைக்காக இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் தேசிய கீதத்திற்கான ஒலிப்பதிவில் 1952ஆம் ஆண்டு புல்லாங்குழலை பின்னணியாக வாசிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.

வளங்கள்

  • நூலக எண்: 7474 பக்கங்கள் 52-53