ஆளுமை:விஸ்வநாதன், துரைசாமி ரெட்டியார்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் துரை விஸ்வநாதன்
பிறப்பு 1931.02.28
இறப்பு 1998.12.21
ஊர் துறையூர், தமிழ்நாடு
வகை பதிப்பாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

துரை விஸ்வநாதன் (1931.02.28 - 1998.12.21) தமிழ்நாடு, துறையூரைச் சேர்ந்த பதிப்பாளர். இவர் 1945 ஆம் ஆண்டு தொழில் நிமிர்த்தம் இலங்கையில் குடியேறி, வியாபாரத் துறையில் தன்னை ஸ்தாபித்துக் கொண்டார். 1966 ஆம் ஆண்டு ஜூன் மாதம் மாத்தளையில் ராணி கிரைண்டிங் மில்ஸ் எனும் நிறுவனத்தை ஆரம்பித்த இவர் அதே ஊரில் 1967 ஆம் ஆண்டு விஜயாஸ் எனும் வியாபார நிறுவனத்தை தொடங்கினார்.

1976ஆம் ஆண்டு கொழும்பு நகரில் விஜயா ஜெனரல் ஸ்டோர்ஸ் எனும் நிறுவனத்தை ஆரம்பித்தார். அந்த நாள் தொடக்கம் கலை இலக்கியப் படைப்புக்களைத் தேடிப் படிப்பதிலும், கலை இலக்கிய கூட்டங்களில் செல்வதிலும் தணியாத ஆர்வம் கொண்டார். அதன் பயனாக மல்லிகை இதழின் ஆசிரியர் டொமினிக் ஜீவா , தெளிவத்தை ஜோசப் , பிரேம்ஜி ,ஆகியோரின் உறவும், இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் போன்ற இயக்கத்தின் தொடர்பும் ஏற்பட அவரது கொழும்பு வியாபார நிறுவனத்தின் மேல்மாடியை கலை இலக்கிய கூட்டங்கள் நடக்கின்ற ஒரு மண்டபமாக உருவாக்க வைத்ததோடு, 'துரைவி' என்ற பதிப்பகத்தை உருவாக்கும் சிந்தனையை அவருக்குள் வித்திட வைத்து.

இவ்வாறாக உருவாக்கப்பட்ட துரைவி பதிப்பகத்தினூடாக மலையகச் சிறுகதைகள், உழைக்கப் பிறந்தவர்கள், பாலாயி, மலையகம் வளர்த்த தமிழ், சக்தி பாலையாவின் கவிதைகள், ஓரு வித்தியாசமான விளம்பரம், மலையக மாணிக்கங்கள், மலையகச் சிறுகதை வரலாறு முதலான நூல்களை பதிப்பித்து வெளியீடு செய்து மலையக இலக்கிய வளர்சியில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளார்.

இவர் 1996ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் இலங்கை அரசினால் சமாதான நீதவானாக நியமனம் பெற்றார். இவரது இலக்கியப் பங்களிப்பை கெளரவித்து 1997ஆம் ஆண்டு இலங்கை மத்திய மாகாண சாகித்திய விழாவில் கலாசார அமைச்சின் விருது வழங்கப்பட்டது. 1997 ஆம் ஆண்டு கண்டி மக்கள் கலை இலக்கிய ஒன்றியம் 'இலக்கியக்காவலர்' எனும் பட்டம் வழங்கிக் கௌரவித்துள்ளன.

வளங்கள்

  • நூலக எண்: 4293 பக்கங்கள் 113-115


வெளி இணைப்புக்கள்

துரை விஸ்வநாதன் பற்றி தினகரன் வலைத்தளத்தில்