ஆளுமை:மயில்வாகனம், அம்பலம்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 10:13, 17 நவம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=மயில்வாகனம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் மயில்வாகனம், அம்பலம்
தந்தை அம்பலம்
பிறப்பு 1895
இறப்பு 1969.04.25
ஊர் ஆனைக்கோட்டை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அ. மயில்வாகனம் (1895 - 1969.04.25) யாழ்ப்பாணம், ஆனைக்கோட்டையைச் சேர்ந்த மிருதங்க இசைக் கலைஞர். இவரது தந்தை அம்பலம். கும்பகோணம் ராஜமாணிக்கம்பிள்ளை அவர்களது நாடகக் குழுவுடன் இணைந்து இவர் இந்தியா சென்று அவர்களின் வழிகாட்டலில் மிருதங்கம், ஹார்மோனியம், டோலக், தபேலா போன்ற வாத்தியங்களைப் வாசிக்கப் பயின்றதோடு மட்டுமல்லாமல் மேற்படி வாத்தியங்களின் தயாரிப்பு நுட்பங்களையும் நன்கு பயின்றார்.

இவர் இந்திய கலைஞர்களான மதுரைராஜப்பா, அம்பல்ராமச்சந்திரன், சுப்பராமபாகவதர், மதுரைநடராஐயர் ஆகியோருடன் இணைந்தும் பல கச்சேரிகளை நிகத்தியுள்ளார். இவர் ஏறக்குறைய 50 வருடங்கள் வரையில் லய வாத்தியங்கள் வாசித்துள்ளார். யாழ்ப்பாண நாடக அரங்கில் இவருக்கு கோடையடி மயில்வாகனம் எனும் பட்டம் விஸ்வநாத்தாஸ் அவர்களால் அளிக்கப்பட்டது.

வளங்கள்

  • நூலக எண்: 7474 பக்கங்கள் 18-20