ஆளுமை:நடராசா, பிள்ளையினார்
நூலகம் இல் இருந்து
Gopi (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 06:01, 16 நவம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | நடராசா, பிள்ளையினார் |
தந்தை | பிள்ளையினார் |
பிறப்பு | 1939.08.14 |
ஊர் | மயிலங்கூடல், இளவாலை |
வகை | கவிஞன் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
ஆடலிறை எனும் புனைபெயரில் இலக்கிய உலகில் அறிமுகமான பி. நடராசா (1939.08.14 - ) யாழ்ப்பாணம் இளவாலை மயிலங்கூடலை பிறப்பிடமாகக் கொண்ட ஓர் கவிஞன். இவரது தந்தையாரின் பெயர் பிள்ளையினார். மயிலங்கூடலூர் நடராசா என்றழைக்கப்படும் இக் கலைஞர் ஒரு இளைப்பாறிய ஆசிரியர் ஆவார். இவர் பண்டிதம் என்னும் சஞ்சிகையின் ஆசிரியராக இருந்து சிறப்பு பணியாற்றினார்.
சிறுவர் இலக்கியத்துறையில் இருபத்தைந்து நூல்களுக்கு மேல் வெளிவர இக் கவிஞர் காரணமாகவிருந்தார். ஈழத்துப் பத்திரிகைகளில் காலத்திற்கு காலம் ஏற்படுகின்ற மாற்றங்களை மையமாகக் கொண்டு இவரின் கவிதைகள் வெளிவந்திருக்கின்றன. இவரது ஆடலிறை குழந்தைப் பாடல்கள் நூல் யாழ். இலக்கிய வட்டத்தின் வெளியீடாக வெளிவந்தமை குறிப்பிடத்தக்கது.
வளங்கள்
- நூலக எண்: 7571 பக்கங்கள் 22