ஆளுமை:மஹ்ரூப், சின்ன லெப்பை அப்துல் சமத்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் மஹ்ரூப், சின்ன லெப்பை அப்துல் சமத்
தந்தை சின்ன லெப்பை அப்துல் சமத்
தாய் சுலைஹா உம்மா
பிறப்பு 1942.09.11
ஊர் உடுநுவர
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சி. மஹ்ரூப் (1942.09.11 - ) கண்டி, உடுநுவரையைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை சின்ன லெப்பை அப்துல் சமத்; தாய் சுலைஹா உம்மா. ஹந்தெஸ்ஸ அல்மனார் தேசிய கல்லூரியில் தனது ஆரம்பக் கல்வியையும், இடைநிலை, உயர்தரக் கல்வியினை கம்பளை சாஹிரா கல்லூரியிலும் பயின்று கொழும்பு பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டம் பெற்றார். பட்டதாரி ஆசிரியராக 1968ஆம் ஆண்டில் நியமனம் பெற்ற இவர் தேசிய கல்வி நிறுவனத்தில் கல்வி டிப்ளோமா பட்டம் பெற்றார். இலங்கையின் பல பாகங்களிலும் ஆசிரியராகப் பணியாற்றி, பின்பு அதிபர் சேவையில் இணைந்து அதிபராகவும் பணியாற்றியுள்ளார். மத்திய மாகாண கமநல அபிவிருத்தி அமைச்சின் இணைப்பாளராக பணியாற்றி 2002ஆம் ஆண்டில் ஓய்வுப் பெற்றார்.

இவரது முதல் ஆக்கம் கொல்லிப்பிசாசு எனும் தலைப்பில் 1965ஆம் ஆண்டில் மணிக்குரலில் பிரசுரமானது. கல்வி சார் ஆக்கங்கள், பொது அறிவு சார் ஆக்கங்கள், அரசியல் பொருளாதாரம் தொடர்பான கட்டுரைகள், போன்றவற்றை இவர் எழுதியுள்ளார். அறிந்தவற்றை அறிந்து கொள்ள பொது அறிவுச் சுடர், பொது அறிவுச் சுடர், புதிய பொது அறிவுச் சுடர், சுடர் வினாத் தொகுதி, ஓவியக்கலைச் சுடர், பொது அறிவுச் சுடரின் கரண்ட் எப்பயர்ஸ், நவீன பொது அறிவுக் களஞ்சியம், புதிய திருத்திய ஓவிய கலைச் சுடர் போன்ற நூல்களை எழுதியுள்ளார்.

இவரின் சேவைகளைக் கருத்தி 1999ஆம் ஆண்டு மத்திய மாகாண சபையின் இஸ்லாமிய சாகித்திய விழாவில் 'கலைச்சுடர்' ஆளுநர் விருது வழங்கப்பட்டதோடு 2009ஆம் ஆண்டு இலங்கை அரசு 'கலாபூஷணம்' விருதையும் வழங்கிக் கௌரவித்தது.

வளங்கள்

  • நூலக எண்: 13943 பக்கங்கள் 172-175