ஆளுமை:மொஹம்மது நிசார், ஹாமிது லெப்பே

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 00:27, 11 நவம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=மொஹம்மது நி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் மொஹம்மது நிசார், ஹாமிது லெப்பே
தந்தை ஹாமிது லெப்பே
தாய் ஹவ்வா உம்மா
பிறப்பு 1948.05.25
ஊர் உடுநுவரை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஹா. மொஹம்மது நிசார் (1948.05.25 - ) கண்டி, உடுநுவரையைச் சேர்ந்த எழுத்தாளர் இவரது தந்தை ஹாமிது லெப்பே; தாய் ஹவ்வா உம்மா. உடுநுவரை டி. பி. விஜயதுங்க தேசிய பாடசாலை, கம்பளை சாஹிரா தேசிய பாடசாலை, கம்பளை விக்கிரமபாகு தேசிய பாடசாலை ஆகியவற்றில் கல்வி கற்ற இவர் இலக்கியத் துறையில் ஆர்வமிக்கவராகக் காணப்பட்டதோடு இவரின் கன்னியாக்கம் 1979ஆம் ஆண்டு தினகரன் வாரமஞ்சரியில் “உலக சாதனை” எனும் பெயரில் பிரசுரமானது. அதிலிருந்து நூற்றுக்கணக்கான சிறுகதைகள், சிறுவர் கதைகள், கவிதைகள் போன்றவற்றை இவர் எழுதியுள்ளார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் தினகரன், தினக்குரல், சுடரொளி, நவமணி, தினபதி, சிந்தாமணி போன்ற தேசிய பத்திரிகைகளிலும் பல்வேறு சஞ்சிகைகளிலும் பிரசுரமாகியுள்ளன. அத்துடன், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் சில நிகழ்ச்சிகளிலும் ஒலிபரப்பாகியுள்ளன.

கனவுப் பூக்கள், ஓயாத அலைகள், நட்சத்திரப் பூக்கள், வெந்நிலா, மலரும் மொட்டுக்கள், சிறகு விரி ஆகிய நூல்களை எழுதியுள்ள இவருக்கு 2008ஆம் ஆண்டு கலாபூஷணம் விருதும் கிடைக்கப்பெற்றுள்ளது.

வளங்கள்

  • நூலக எண்: 13943 பக்கங்கள் 146-148


வெளி இணைப்புக்கள்