ஆளுமை:ஞானராசா, செபஸ்டியாம்பிள்ளை

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ஞானராசா, செபஸ்டியாம்பிள்ளை
தந்தை செபஸ்டியாம்பிள்ளை
தாய் பரமேஸ்வரி
பிறப்பு 1964.03.03
ஊர் மன்னார்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஞானராசா, செபஸ்டியாம்பிள்ளை (1964.03.03 -) மன்னாரைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை செபஸ்டியாம்பிள்ளை, தாய் பரமேஸ்வரி. இவர் தனது ஆர்ம்பக் கல்வியை மன்னார் மாவிலங்கேணி றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையிலும், இடைநிலை உயர்தரக் கல்வியினை மன்னார் முருங்கன் மகா வித்தியாலயத்திலும் கற்றார். தேசிய கல்வி நிலையத்தில் கல்விமாணிப் பட்டம் பெற்றுள்ள இவர் திருகோணமலை அ.த.க. பாடசாலையில் அதிபராகக் கடமையாற்றினார்.

இவரது முதல் ஆக்கம் எல்லாம் தவறு தான் வாழ்வினிலே எனும் தலைப்பிலே இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபன ஒலிமஞ்சரியில் ஒலிபரப்பாகியது. 1983ஆம் ஆண்டு புதிய யுகம் எனும் சஞ்சிகையில் இவரது முதல் கவிதையான மீட்பு என்றும் உண்டு எனும் தலைப்பில் பிரசுரமானது. மேலும் 2001ஆம் ஆண்டு எதிர்பர்ப்பு எனும் கவிதைத் தொகுதி உள்ளடங்கிய நூலையும், 2006ஆம் ஆண்டு சிறுவர் பாடல்கள் உள்ளடங்கிய சிறுவர் பா அமுதம் படி மகிழ்வோம் அகிய நூல்களையும் வெளியிட்டுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 13943 பக்கங்கள் 103-105