ஆளுமை:நீலாபாலன், நல்லதம்பி

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் நீலாபாலன்
தந்தை நல்லதம்பி
தாய் பூரணிப்பிள்ளை
பிறப்பு 1948.14.04
ஊர் கல்முனை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

நல்லதம்பி பூபாலரத்தினம் என்ற இயற்பெயரைக் கொண்ட நீலாபாலன் (1948.14.04 - ) கல்முனையைச் சேர்ந்த எழுத்தாளர்.ஈவரது தந்தை நல்லதம்பி; தாய் பூரணிப்பிள்ளை. இவர் தனது ஆரம்பக் கல்வி முதல் அ.பொ.த. உயர்தரம் (வணிகம்) வரையான கல்வியை கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையிலே பெற்றுக் கொண்டார்.

பாடசாலையில் பயிலும் காலத்தில் 'தமிழோசை' என்ற கையெழுத்துப் பத்திரிகையின் ஆசிரியராக திகழ்ந்தார். நான்கு தசாப்தங்களுக்கு மேலாக எழுதும் நீலாபாலனின் கன்னிக்கவிதை 1965 தினகரன் புதன் மலரில் அன்னைத் தமிழ் என்னும் தலைப்பில் பிரசுரமானது. அதைத் தொடர்ந்து சுதந்திரன் மாணவர் பகுதியில் அன்னை எனும் தலைப்பில் அடுத்த கவிதையை எழுதினார்.

இலந்தைப் பழத்துப் புழுக்கள், கடலோரத் தென்னைமரம் போன்ற இவரது கவிதைத் தொகுப்புக்களாகும். இவரது கவியாற்றலுக்காய் பாவரவு, கவிதை வித்தகன், கவிமணி, தமிழ் மணி, கவி மாமணி, கவிதைப்பரிதி, கலாபூசணம் போன்ற விருதுகளைப் பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 13943 பக்கங்கள் 85-96


வெளி இணைப்பு