ஆளுமை:பொன்னம்பலம், கதிரவேல்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:09, 9 நவம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=பொன்னம்பலம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பொன்னம்பலம், கதிரவேல்
தந்தை கதிரவேல்
தாய் சோதிமணி
பிறப்பு 1953.06.05
ஊர் புத்தளம்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

க. பொன்னம்பலம் (1953.06.05 - ) புத்தளத்தைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை கதிரவேல்; தாய் சோதிமணி. இசர் புத்தளம் அரசினர் முஸ்லிம் பாடசாலையில் தனது ஆரம்பக் கல்வியையும், புத்தளம் ஸாஹிராக் கல்லூரியில் உயர்தரக் கல்வியையும் கற்று நகைத் தொழிலில் ஈடுபட்டு வந்தார்.

இவரது முதல் நெடுங்கவிதை பூமாலை சஞ்சிகையில் 1974ஆம் ஆண்டு வெளிவந்ததோடு, முதலாவது சிறுகதை 1977.12.25ஆம் திகதி பாவமன்னிப்பு என்னும் தலைப்பில் வீரகேசரி வாரவெளியீட்டில் பிரசுரமானது. இவற்றைத் தொடர்ந்து 25க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், 100க்கும் மேற்பட்ட கவிதை, கட்டுரை, விமர்சனம், ஆய்வு போன்றவற்றையும் இவர் இயற்றியுள்ளார். மேலும் அவள் ஏற்றிய தீபம் என்றொரு மேடை நாடகத்தையும், அவனுக்கென்று ஒரு மனம் என்ற சிறுகதையும் இவர் படைத்துள்ளார்.


வளங்கள்

  • நூலக எண்: 13943 பக்கங்கள் 81-84