ஆளுமை:கோபாலகிருஷ்ணன், தம்பியப்பா

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கோபாலகிருஷ்ணன், தம்பியப்பா
தந்தை தம்பியப்பா
தாய் கனகம்மா
பிறப்பு 1950.12.13
ஊர் கல்முனை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

த. கோபாலகிருஷ்ணன் (1950.12.13 - ) மட்டக்களப்பு, கல்முனையைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை தம்பியப்பா; தாய் கனகம்மா. இவர் தனது ஆரம்பக் கல்வியை பொத்துவில் மெதடிஸ்த மிஸன் தமிழ்க் கலவன் பாடசாலையில் பயின்றார். பின்னர் ஐந்தாம் வகுப்புப் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்ததன் பயனாக மட்டக்களப்பு வந்தாறுமூலை மத்திய மகாவித்தியாலயத்தில் க.பொ.த.உயர்தரம் (விஞ்ஞானம்) வரை பயின்றார். 1968இல் சப்ரகமுவ நீர்பாசனப் பயிற்சிக் கலாசாலைக்கு நீர்பாசனப் பயிலுனராக சென்று இருவருடகாலம் ஆங்கிலமொழி மூல வதிவிடப் பயிற்சிப் பெற்று வெளியேறி 01.02.1971இல் இலங்கை நீர்பாசனத் திணைக்களத்தில் தொழில் நுட்ப உத்தியோகத்தராக நியமனம் பெற்றார்.

இவரது முக்கியமான ஈடுபாட்டுத்துறை கவிதை எனினும் சில சிறுகதைகளும், உருவகங்களும் எழுதியுள்ளார். டொமினிக் ஜீவாவின் மல்லிகை இதழிலும் இவரது கவிதைகள் சில பிரசுரமாகியுள்ளன. கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் நீண்டகால உறுப்பினரான இவர் கடந்த காலங்களில் அதன் நூலகச் செயலாளர், இலக்கியச் செயலாளர் ஆகிய பதவிகளில் பணி புரிந்துள்ளார். இவர் நூலகச் செயலாளராக இருந்த காலத்தில் தான் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் சிறுவர் பகுதி ஆரம்பித்து வைக்கப்பட்டது.


வளங்கள்

  • நூலக எண்: 13943 பக்கங்கள் 74-80