ஆளுமை:முருகேசபண்டிதர், பூதப்பிள்ளை

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் முருகேசபண்டிதர், பூதப்பிள்ளை
தந்தை பூதப்பிள்ளை
பிறப்பு
ஊர் சுன்னாகம்
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

பூ. முருகேசபண்டிதர் யாழ்ப்பாணம் சுன்னாகத்தைச் சேர்ந்த புலவர். இவரது தந்தை பெயர் பூதப்பிள்ளை. மயிலணிச் சிலேடை வெண்பா, மயிலணி ஊஞ்சல், மயிலணிப் பதிகம், சந்திரசேகர விநாயகரூஞ்சல், குடந்தை வெண்பா, நீதிநூறு, பதார்த்ததீபிகை என்பன இவர் இயற்றிய நூல்கள் ஆகும். இலக்கணத்திற் பெரிதும் சாமர்த்தியம் வாய்ந்தவர் என்பதனால் 'இலக்கணக் கொட்டன்' என அழைக்கப்பட்டார். மடக்கு, சிலேடை முதலிய கவிகள் பாடுவதில் வல்லவர்.


வளங்கள்

  • நூலக எண்: 100 பக்கங்கள் 218
  • நூலக எண்: 3003 பக்கங்கள் 76-80
  • நூலக எண்: 963 பக்கங்கள் 193