ஆளுமை:சிதம்பரப்பிள்ளை, வே.

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சிதம்பரப்பிள்ளை, வே.
பிறப்பு
இறப்பு 1955.11.15
ஊர் புலோலி
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

வே. சிதம்பரப்பிள்ளை ( - 1955.11.15) யாழ்ப்பாணம் புலோலியூரைச் சேர்ந்த புலவர். இவர் தனது பதுன்மூன்றாவது வயதில் கண்பார்வையை முற்றாக இழந்த போதும் கல்வியறிவைப் பெற்றுக் கொள்ளுதல் பொருட்டு பிறர் வாசிக்கக் கேட்டும், அறிஞர் படிப்பிக்கும் இடங்களிலும் புராண படனம் நடைபெறும் இடங்களிலும் போய்க் கேட்டும், மனதிற் பதித்து மிகுந்த புலமை படைத்தவரானர்.

புராணங்களுக்கு பொருள் கூறுவதிலும் பாக்கள் இயற்றுவதிலும் திறமை படைத்தவராக விளங்கிய இவர் மாணவர்களுக்கு தமிழ் நூல்களை கற்பிப்பதற்காக திண்ணைப் பள்ளிக்கூடம் ஒன்றினையும் நடாத்தி வந்தார். கந்தபுரணத்துச் சூரபன்மன் வதைப் படலத்துக்கு இவர் சிறந்த உரையொன்றினை எழுதியுள்ளார். மேலும் கந்தபுராணத்துக்கும் தெய்வானை திருமணப் படலத்துக்கும் திருவானைக்காப்புராணத்துக்கும் இவர் உரை எழுதியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 963 பக்கங்கள் 113-114