ஆளுமை:நவரத்தினம், கந்தையா
பெயர் | நவரத்தினம், கந்தையா |
தந்தை | கந்தையா |
பிறப்பு | 1898 |
இறப்பு | 1962 |
ஊர் | வண்ணார்பண்ணை |
வகை | கலை இலக்கிய விமர்சகர், எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
க. நவரத்தினம் (1898 - 1962) யாழ்ப்பாணம், வண்ணார்பண்ணையைச் சேர்ந்த கலை இலக்கிய விமர்சகர், எழுத்தாளர். இவரது தந்தை கந்தையா. யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் ஏறக்குறைய 38 ஆண்டுகள் வரை ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்த இவர் கலாநிலையம் என்னும் இலக்கிய வளர்ச்சித் தாபனத்தினை யாழ்ப்பாணத்தில் நிறுவி ஞாயிறு என்னும் உயரிய செந்தமிழ் திங்கள் வெளியீட்டினை சிறந்த முறையில் வெளியிட்டு வந்தார்.
நவரத்தினம் அவர்கள் கலை, கைப்பணித் துறைகளில் ஆற்றிவரும் பணிகளைக் கௌரவித்து, மேலவை, நாடாளுமன்ற உறுப்பினர் சு. நடேசபிள்ளையின் தலைமையில் நடைபெற்ற இலங்கையிற் கலைவளர்ச்சி என்னும் நூல் அறிமுக விழாவின் போது யாழ்ப்பாண மக்கள் சார்பில் கலைப்புலவர் என்னும் பட்டத்தை நடேசபிள்ளை அவர்கள் இவருக்கு வழங்கிக் கௌரவித்தார்.தென்னிந்திய சிற்ப வடிவங்கள்' இலங்கையிற் கலை வளர்ச்சி ஆகிய தமிழ் நூல்கள் இரண்டினை மிகச் செவ்விய நூலுருவிற் படங்களுடன் வெளியிட்டதோடு இவர் Advaita Vedanta -An Introductory Study, Saiva Siddhanta, Hindu Temple Reform,வீர சைவம் அல்லது இலிங்காயதம், சிவானுபூதி செந்நெறி, Bhagavad Gita – An Introductory Study, Studies in Hinduism போன்ற சமய நூல்களையும், யாழ்ப்பாணக் கலையும் கைப்பணியும், தென் இந்திய சிற்ப வடிவங்கள், இலங்கையிற் கலைவளர்ச்சி, இந்திய ஓவியங்கள், Arts and Crafts of Jaffna,Development of Art in Ceylon, Religion and Art, Tamil Element in Ceylon Culture போன்ற கலை நூல்களையும், கணக்குப் பதிவு நூல், உயர்தரக் கணக்குப் பதிவு நூல், இக்கால வாணிப முறை போன்ற வாணிப நூல்களையும் வெளியிட்டுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 963 பக்கங்கள் 165