ஆளுமை:தில்லைநாதநாவலர், மயில்வாகனன்
பெயர் | தில்லைநாத நாவலர், மயில்வாகனன் |
தந்தை | மயில்வாகனன் |
பிறப்பு | 1854 |
இறப்பு | 1939 |
ஊர் | புலோலி |
வகை | எழுத்தாளர், சொற்பொழிவாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
ம. தில்லைநாத நாவலய் யாழ்ப்பாணம் புலோலியைச் சேர்ந்த எழுத்தாளார், சொற்பொழிவாளர். இவரது தந்தை மயில்வாகனன். இளமைக்காலம் தொடங்கியே தமிழ் இலக்கிய இலக்கணங்களில் ஆர்வம் முகுந்தவராய் விளங்கிய இவர் உடுப்பிட்டி சிவசம்பு புலவரிடத்தில் நீதி நூல்களையும், இலக்கணங்களையும், புராணங்களையும் கற்றார்.
இளமைக் காலத்திலேயே இந்தியாவுக்குச் சென்று சொற்பொழிவுகளை ஆற்றிக் கொண்டிருந்த இவரை பாண்டித்துறை தேவரவர்கள் வரவேற்றுப் போற்றியதோடு, குன்றக்குடி திருவாடுதுறை ஆதீனத்தினைச் சார்ந்த அம்பலவாண தேசிகரும், மதுரை ஆதீனத்தைச் சேர்ந்த திருஞானசம்பந்த தேசிகரும், திருவண்ணாமலை ஆதீனத்தைச் சேர்ந்த தாணடவராய தேசிகரும் குழுமிப் போற்றி நாவலர் பட்டம் வழங்கினர்.
திருவிளையாடற் புராணத்தின் வேதப் பொருளரருளிச் செய்த படலத்துகு அகவுரையெழுதி வெளியிட்டுள்ளார். திருவள்ளுவர் சமணர் என்னும் கொள்கை மறுப்பு என்னும் நூலும் இவரால் வெளியிடப்பட்டுள்ளது.
வளங்கள்
- நூலக எண்: 963 பக்கங்கள் 158-159