ஆளுமை:செகராசசேகரன்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் செகராசசேகரன்
பிறப்பு 1380
இறப்பு 1414
ஊர் யாழ்ப்பாணம்
வகை மன்னர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

செகராசசேகரன் யாழ்ப்பாணத்து மன்னர். ஒன்றுக்கு மேற்பட்ட மன்னர்கள் இப்பெயரை அரியணைப் பெயராகக் கொண்டிருந்தனர். இவர் காலத்து நூல்கள் இவர் பெயரில் வெளியாகியுள்ளன. செகராசசேகரம், பரராசம்சேகரம், அங்காதிபாதம் போன்ற வைத்திய நூல்களும் செகராசசேகர மாலை எனும் சோதிட நூலும் அத்தகைய நூல்களாகும். இம் மன்னன் காலத்தில் பண்டிதராசர் என்னும் புலவர் தக்‌ஷண கைலாச புராணம் என்னும் புராணத்தை இயற்றியுள்ளார். அத்தோடு இவரால் 632 விருத்தப்பாக்களால் இயற்றப்பட்ட தக்கிண கைலாச புராணம் அரசகேசரியின் பாயிரத்தை கொண்டுள்ளதாய் அமைந்துள்ளது. ஈழத்துத் தமிழ்க் கவிதைக் களஞ்சியம் நூலின் படி சிங்கைச் செகராசசேகரன் ஆட்சிக்காலம் 1380-1414 ஆகும்.


வளங்கள்

  • நூலக எண்: 3003 பக்கங்கள் 9-11
  • நூலக எண்: 100 பக்கங்கள் 17
  • நூலக எண்: 963 பக்கங்கள் 131-132

வெளி இணைப்புக்கள்

"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:செகராசசேகரன்&oldid=163959" இருந்து மீள்விக்கப்பட்டது