ஆளுமை:சுப்பிரமணிய சாஸ்திரிகள், சபாபதி ஐயர்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:52, 30 அக்டோபர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=சுப்பிரமணி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சுப்பிரமணிய சாஸ்திரிகள், சபாபதிஐயர்
தந்தை சபாபதிஐயர்
பிறப்பு 1875.02.17
இறப்பு 1950
ஊர் தும்பளை
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ச. சுப்பிரமணிய சாஸ்திரிகள் (1875.02.17 - 1950) யாழ்ப்பணம், புலோலி, தும்பளையைப் பிறப்பிடமாகக் கொண்ட புலவர். இவரது தந்தை சபாபதிஐயர். ஆரம்பத்தில் மகாதேவக் குருக்களிடம் தமிழ், சமஸ்கிருதம் ஆகிய இரு மொழிகளையும் கற்ற இவர் முத்துக்குமாரசுவாமி குருக்களிடம் தமிழ் இலக்கண இலக்கியங்கள், சமஸ்கிருதம், தருக்கம், வியாகரணம், சோதிடம் ஆகியவற்றை முறையே கற்றுக் கொண்டார்.

புலோலி சைவ வித்தியாசாலையில் ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்த இவர் அக் காலத்தில் யாழ்ப்பாணத்தில் கணிக்கப்பட்டு வெளியிடப்பட்ட பஞ்சாங்கங்கள் சீரான முறையில் கணிக்கப்படாமையைக் கண்டு அவற்றிலுள்ள குறைபாடுகளை நீக்க முயற்சி செய்ததோடு இவரது பெரு முயற்சியினாலேயே பருத்தித்துறையில் வாக்கிய கணித பஞ்சாங்கமொன்று வெளிவந்து கொண்டிருந்தது. பின்னர் தமது இல்லத்திலேயே சோதிட விலாச யந்திரசாலை என்னும் பெயருடன் அச்சகமொன்றையும் நிறுவிக் கொண்டார். மேலும் 1904ஆம் ஆண்டு மீண்டும் புதியதொரு அச்சகத்தினை கலாநிதி யந்திரசாலை என்னும் பெயருடன் நிறுவிக் கொண்டார்.

கந்தபுராணம் உற்பத்திக் காண்டம், அசுர கண்டம், மகேந்திர காண்டம், யுத்த காண்டம் ஆகியவற்றை உரையுடனும், நீதிவெண்பாவுக்கான விரிவுரையையும், கந்தரனுபூதி உரையும், ஏகாதசிக் குறிப்பும், சொற்பொருள் விளக்கம் - தமிழ் அகராதியையும் இவர் இயற்றியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 963 பக்கங்கள் 124-126