ஆளுமை:கூழங்கைத் தம்பிரான்
நூலகம் இல் இருந்து
Pirapakar (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:55, 30 அக்டோபர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம்
பெயர் | கூழங்கைத் தம்பிரான் |
பிறப்பு | |
இறப்பு | 1795 |
ஊர் | காஞ்சிபுரம் |
வகை | புலவர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
கூழங்கைத் தம்பிரான் தமிழ்நாடு, காஞ்சிபுரத்தை பிறப்பிடமாகவும் யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையை வாழ்விடமாகவும் கொண்ட புலவர். தஞ்சையிலுள்ள திருவத்தூர் மடத்திலே தம்பிரானாக விளங்கிய இவரை அம்மடாதிபதி தம்முடைய கண்டிகை களவு போயினமையால் சந்தேகங் கொண்டு அவரைச் சத்தியம் செய்யுமாறு கேட்க, அவர் உருக்கிய நெய்யிலே கையிடச்சொன்னாலுஞ் செய்வேனென்று கூறி, அவ்வாறு கையிட்டுத் தன் சத்தியத்தை நாட்டி அதனால், கை கூழையாகப் பெற்றவர் என்று கூறுவர்.
இச்சம்பவத்தால் ஏற்பட்ட மனக்கசப்பால் அங்கிருந்து விலகி யாழ்ப்பாணத்தில் குடியேறி வண்ணார்பண்ணை வைத்திலிங்கச் செட்டியாரின் ஆதரவில் வசித்துவந்தார். செட்டியாருக்கும் அவரது பிள்ளைகளுக்கும் கற்பித்துவந்த இவரது புகழ் அறியப்பட கொழும்பு உட்பட பல இடங்களிலிருந்தும் பாதிரிமாரும், பிறரும் இவரை அழைத்து கல்விபயின்றனர்.
இவர் தனது நண்பரான பிலிப்பு தெமெல்லோ என்ற பாதிரியார்மீது 'யோசப்பு புராணம்' என்னும் காவியத்தை 21 காண்டம், 1023 விருத்தத்தில் பாடியுள்ளார். இவற்றுடன் நல்லைக் கலிவெண்பா, கூழங்கையர் வண்ணம், சித்திவிநாயகர் திருவிரட்டை மணிமாலை ஆகிய செய்யுள் நூல்களையும் இயற்றியுள்ளார்.
வளங்கள்
- நூலக எண்: 100 பக்கங்கள் 120
- நூலக எண்: 963 பக்கங்கள் 93