ஆளுமை:சிவபாதசுந்தரம், சுப்பிரமணியபிள்ளை

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:43, 30 அக்டோபர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=சிவபாதசுந்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சிவபாதசுந்தரம், சுப்பிரமணியபிள்ளை
தந்தை சுப்பிரமணியபிள்ளை
பிறப்பு 1877
இறப்பு 1953
ஊர் புலோலி
வகை கல்வியியலளர், புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சு. சிவபாதசுந்தரம் (1877 - 1953) யாழ்ப்பாணம், புலோலியூரைச் சேர்ந்த கல்வியியலளர், புலவர். இவரது தந்தை சுப்பிரமணியபிள்ளை. இவரது தந்தை உட்பட வ.குமாரசுவாமிப் புலவர், வ.கணபதிப்பிள்ளை, பார்வதி அம்மையார் ஆகியோரும் இவருக்கு தமிழும் சமஸ்கிருதமும் கற்பித்தார்கள். மேலும் தென்னிந்தியாவில் உயர்தர ஆங்கில கல்வி கற்பதற்காகச் சென்ற இவர் சென்னைப் பல்கலைக்கழகத்தின் (B.A.)த் தேர்வில் சித்தியடைந்தார். அதன் பின் யாழ்ப்பாணத்துக்கு திரும்பி வந்து 1924ஆம் ஆண்டு தொடங்கி 9 ஆண்டுகளாக சுழிபுரம் விக்றோறியாக் கல்லூரி அதிபராக கடமையாற்றினார்.

1939ஆம் ஆண்டில் இலங்கை கல்வி முறையினைத் திருத்தியமைப்பதற்காக நிறுவப்பட்ட ஆணைக்குழுவில் உறுப்பினராக செயற்பட்டு வந்தார். சைவப்போதம், திருவருட்பயன் விளக்கவுரை, சைவக்கிரியை விளக்கம், கந்தபுராண விளக்கம், திருவாசக மணிகள், அளவை நூல், அக நூல், படிப்பிக்கும் முறைகளும் விதிகளும், திருப்பெருவடிவம், Saiva School of Hinduism, Essential of Logic, Gloriese of Sarvaism ஆகியன இவர் இயற்றிய நூல்களாகும்.

வளங்கள்

  • நூலக எண்: 963 பக்கங்கள் 116-117