ஆளுமை:கிங்ஸ்பரித் தேசிகர், தமோதரம்பிள்ளை

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கிங்ஸ்பரித் தேசிகர், தமோதரம்பிள்ளை
தந்தை சி. வை. தமோதரம்பிள்ளை
தாய் நாகமுத்து அம்மை
பிறப்பு 1873.08.08
இறப்பு 1941.04.12
ஊர் சென்னை
வகை கல்வியியலாளர், சமயப்பெரியார்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அழகசுந்தரர் என்ற இயற் பெயரைக் கொண்ட தா. கிங்ஸ்பரித் தேசிகர் (1873.08.08 - 1941.04.11) சென்னை, தண்டையார்பேட்டையைப் பிறப்பிடமாகக் கொண்ட கல்வியியலாளர், சமயப்பெரியர். இவரது தந்தை சி. வை. தாமோதரம்பிள்ளை; தாய் நாகமுத்து. உரிய காலத்தில் இவர் கல்வி கற்கத் தொடங்கினாரெனினும் சென்னைக்கும் யாழ்ப்பாணத்திற்கும் மாறி மாறிச் சென்றமையால் கல்லூரி மாற்றம் காரணமாக கல்வி இடையிலே தடைப்பட்டதுமுண்டு.

1898ஆம் ஆண்டிலே தென்னிந்தியாவிலுள்ள பசுமலைத் தேவாலயத்தில் உதவிப் போதகராக நியமனம் பெற்ற இவர் அடுத்த ஆண்டில் அத் தேவாலயத்தின் தேசிகராக அபிடேகமும் பெற்றார். 1926ஆம் ஆண்டு முதல் கொழும்பில் அமைக்கப்பட்டிருந்த பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக நியமனம் பெற்றர். இவர் கொழும்பில் வசித்த காலத்தில் தேவாலயங்களிலும் நண்பர்கள் பலரது வீட்டிலும் போதனைகளை நடாத்தியதோடு, வானொலியிலும் போதனை செய்தார். விவேகனந்தா சபை - இராமகிருஷ்ண மிஷன் - அன்பு மார்க்க சங்கம் ஆகியவற்றின் நிகழ்ச்சிகளிலும் பங்குப்பற்றி கல்வி வளர்ச்சிக்கும் சமூக முன்னேற்றத்திற்குமாக உழைத்தார்.

இயேசு வரலாறு, இராமன் கதை, பாண்டவர் கதை, சாந்திரகாசம், கடவுள் வாழ்த்துப்பா, அகப்பொருட் குறள், Life of Jesus, Jesus of Nazareth ஆகிய நூல்களை இவர் இயற்றியுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 963 பக்கங்கள் 78-81