ஆளுமை:சதாசிவ ஐயர், தியாகராஜ ஐயர்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 06:03, 29 அக்டோபர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=சதாசிவ ஐயர்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சதாசிவ ஐயர், தியகராஜ ஐயர்
தந்தை தியகரஜ ஐயர்
பிறப்பு 1882
இறப்பு 1950
ஊர் சுன்னாகத்தை
வகை எழுத்தாளர், புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

தி. சதாசிவ ஐயர் (1882 - 1950) யாழ்ப்பாணம், சுன்னாகத்தை சேர்ந்த எழுத்தாளர், புலவர். இவரது தந்தை தியாகராஜ ஐயர். தமிழ், சமஸ்கிருதம், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் ,மிகுந்த புலமை படைத்தவரய் திகழ்ந்த இவர் கல்கத்தாப் பல்கலைக்கழகத்தின் எவ்.ஏ. (F.A.) பிரிவில் முதற் பிரிவில் தேறியவராவார். மல்லாகம் ஆங்கில வித்தியாசாலையிலும், கந்தரோடை ஆங்கில வித்தியாசாலையிலும் இவர் ஆசிரியராகப் பணியற்றினார். மேலும் 1910ஆம் ஆண்டு தொடக்கம் கல்வித் திணைக்களத்தில் வித்தியாதரிசியாகவும், 1927ஆம் ஆண்டு தொடக்கம் பகுதி வித்தியதரிசியாகவும் கடமையாற்றினார்.

யாழ்ப்பாண ஆரிய திராவிட பாஷாபிவிருத்திச் சங்கமானது இவருடைய அயரா உழைப்பினாலேயே 1921ஆம் ஆண்டு தொடங்கப்பெற்றது. தேவி தோத்திர மஞ்சரி, இருதுசங்கார காவியம், தேவிமானச பூசை அந்தாதி, பெருமாக்கடவை பிள்ளையர் இரட்டை மணிமாலை, தமிழ்மொழிப் பயிற்சியும் தேர்சியும் இவர் இயற்றிய நூல்களாகும். கரவை வேலன் கோவை, வசந்தன் கவித்திரட்டு, ஐங்குறுநூறு ஆகியன இவர் வெளியிட்ட நூல்கள் ஆகும்.

சதாசிவ ஐயர் சமூகத்துக்கு ஆற்றிய பணிகளைக் கௌரவிக்குமுகமாக இலங்கை அரசு அவருக்கு முகாந்திரம் என்னும் கௌரவ பட்டத்தை அளித்துச் சிறப்பித்தது.

வளங்கள்

  • நூலக எண்: 963 பக்கங்கள் 100-101

வெளி இணைப்புக்கள்