ஆளுமை:கைலாசபிள்ளை, தம்பு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கைலாசபிள்ளை, தம்பு
தந்தை தம்பு
பிறப்பு
ஊர் நல்லூர்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

கைலாசபிள்ளை யாழ்ப்பாணம் நல்லூரைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை தம்பு. ஆறுமுக நாவலரவர்களால் வண்ணார்பண்ணையில் தாபிக்கப்பட்ட சைவப் பிரகாச வித்தியாசாலையிலேயே இவரது இளமைக் கல்வி தொடங்கிற்று. தமிழ் ஆங்கில மொழிகளில் மட்டுமன்றி சம்ஸ்கிருதத்திலும் நல்ல அறிவு இன்றியமையததெனக் கருதி சமஸ்கிருதத்தையும் நன்கு பயின்றார்.

சிவஞானசித்தியார் - சுபக்கம் - இவரால் ஆராயப்பட்டுத் திருத்தமான பதிப்பாக வெளியிடப்பட்டுள்ளது. மேலும் நாவலர்களின் வாழ்க்கை வரலாற்றினை விரிவாக எழுதி ஆறுமுகநாவலர் சரித்திரம் என வெளியிட்டுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 3003 பக்கங்கள் 200-203
  • நூலக எண்: 963 பக்கங்கள் 96-98