ஆளுமை:குமாரசுவாமிப்பிள்ளை, வன்னித்தம்பி

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:47, 29 அக்டோபர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=குமாரசுவாம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் குமாரசுவாமிப்பிள்ளை, வன்னித்தம்பி
தந்தை வன்னித்தம்பி
தாய் தெய்வானைப்பிள்ளை
பிறப்பு 1875.07.04
இறப்பு 1936
ஊர் தெல்லிப்பழை
வகை வழக்கறிஞர், இலக்கிய ஆய்வாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

வ. குமரசுவாமிப்பிள்ளை (1875.07.04 - 1936) யாழ்ப்பாணம் தெல்லிப்பழையைச் சேர்ந்த வழக்கறிஞர், இலக்கிய ஆய்வாளர். இவரது தந்தை; வன்னித்தம்பி, தாய்; தெய்வானைப்பிள்ளை. இவர் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியில் கல்வி பயின்று, உயர்தர கல்வி கற்பதற்காகக கல்கத்தாவுக்குச் சென்று 1896ஆம் ஆண்டிலே கலைமாணித்தேர்வில் சித்திப் பெற்று பட்டம் பெற்றுக் கொண்டு இலங்கைக்கு திரும்பி வந்தார். அதன் பின் சட்டக்கல்வி பயின்று 1900ஆம் ஆண்டிலே வழக்கறிஞராக கடமையாற்றத் தொடங்கினார்.

இவர் தாம் வழக்கறிஞர் தொழிலினை மேற்கொண்டிருந்த போதிலும் யாழ்ப்பாணத்திலுள்ள பழைய ஏட்டுப் பிரதிகளை தேடிப்பெற்று, ஆராய்ச்சி செய்து, பிழைகள் திருத்தி அச்சேற்றுவதில் கண்ணும் கருத்துமாக இருந்ததோடு தண்டிகை கனகராயன் பள்ளு, கதிரைமலைப் பள்ளு ஆகிய இரு நூல்களையும் தேடிப்பெற்று ஆரய்ந்து, சிறந்த ஆராய்ச்சிக் குறிப்புக்களுடன் அச்சேற்றி வெளிப்படுத்தினார்.

வளங்கள்

  • நூலக எண்: 963 பக்கங்கள் 87-88