ஆளுமை:இராசநாயகம், செல்லப்பாபிள்ளை

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 23:12, 27 அக்டோபர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=இராசநாயகம்,..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் இராசநாயகம், செல்லப்பாபிள்ளை
தந்தை செல்லப்பா பிள்ளை
பிறப்பு 1870.10.22
இறப்பு 1940.01.17
ஊர் நவாலியூர்
வகை புலவர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

செ.இரசநாயகம் (1870.10.22 - 1940.01.07) நவாலியூரைச் சேர்ந்த புலவர், மொப்ழிபெயர்ப்பாளர். இவரது தந்தை செல்லப்பா பிள்ளை. இவர் கொழும்பிலுள்ள அர்ச்.தோமாசுக் கல்லூரியிலே சேர்ந்து கல்வி பயின்று 1889ஆம் ஆண்டிலே இலங்கை அரசாங்க சேவையில் எழுது வினைஞராக கடமையாற்றினார். இவரது நுண்ணறிவையும் தொழில் வனமையும் கண்ட அரசினர், 1920ஆம் ஆண்டிலே உயர் நீதிமன்றத்திற்கு மூன்றாம் துணைப் பதிவாளராக இவரை நியமித்து முதலியார் எனும் சிறப்பிப் பட்டத்தையும் இவருக்கு அளித்தது.

பிற மொழியாளரும் யாழ்ப்பாணத்தின் பழம் பெருமைகளை உணர்ந்து கொள்ளுதல் வேண்டுமெனக் கருதி பண்டைக்கால யாழ்ப்பாணம் (Ancient Jaffna) என்ற பெயருடன் சிறந்த வரலாற்றாராய்ச்சி நூலொன்றினை ஆங்கிலத்தில் இயற்றியதோடு யாழ்ப்பாண வரலாறு எனும் நூல் இவராலேயே விரிவாகவும் தெளிவாகவும் எழுதப்பட்டது.

வளங்கள்

  • நூலக எண்: 963 பக்கங்கள் 96 - 41

வெளி இணைப்புக்கள்