ஆளுமை:பற்குணநாதன், கனகசபை

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:45, 21 அக்டோபர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=பற்குணநாதன..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பற்குணநாதன், கனகசபை
தந்தை கனகசபை
பிறப்பு 1950.07.19
ஊர் அரியாலை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

க. பற்குணநாதன் (1950.07.19 - ) யாழ்ப்பாணம் அரியாலையைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை கனகசபை. அரசாங்க பாடசாலையின் ஆசிரியராக பணிபுரிந்து வந்த இவர் நாடகம், பொம்மலாட்டம் ஆகிய துறைகளில் ஆற்றல் பெற்று விளங்கினார். இவர் இளமைக் காலத்திலேயே அரியாலை திடீர் நாடகமன்ற நாடகங்களில் நடித்து வந்ததோடு வட இலங்கை சங்கீத சபையின் நாடகமும் அரங்கியலும் ஆசிரியர் தரம் - 06இல் சித்திப் பெற்றுள்ளார்.

ஈழத்தின் பல பாகங்களிலும் மேடையேற்றப்பட்டதும், ஆயிரத்து ஐந்நூறு தடவைகளுக்கு மேலாக மேடையேறியதுமான வெளிக்கிடடி விஸ்வமடுவுக்கு என்னும் நகைச்சுவை நடகத்தில் இவர் எழுபத்தைந்து தடவைகளுக்கு மேல் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இருபத்தைந்துக்கும் அதிகமான நாடகங்களில் நடித்திருக்கும் இவர் இருநூறுக்கும் அதிகமான அரங்குகளைக் கண்டவராவார்.

2009ஆம் ஆண்டு அரியாலை சுதேசிய திருநாட் கொண்டாட்ட விழாவில் சிறந்த நாடகக் கலைஞர் கௌரவ விருது இவருக்கு கிடைத்துள்ளது. மேலும் 2008ஆம் ஆண்டு யாழ்ப்பாண திருநெல்வேலி காளியம்மன் இந்து இளைஞர் மன்றமும் இவருக்குப் பொன்னாடை போர்த்திக் கௌரவித்துள்ளது.

வளங்கள்

{{வளம்|7571|176}