ஆளுமை:சிவநேசன், சிவநாமம்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:46, 20 அக்டோபர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=சிவநேசன், ச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சிவநேசன், சிவநாமம்
தந்தை சிவநாமம்
பிறப்பு 1946.05.13
ஊர் அரியாலை
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சி.சிவநேசன் (1946.05.13 - ) யழ்ப்பாணம் அரியாலையைச் சேர்ந்த நாடகக் கலைஞர். இவரது தந்தை சிவநாமம். இளம் பராயத்திலிருந்தே நாடகக் கலையில் ஆற்றல் கொண்ட இவர் கதாநாயகன், கதாநாயகி, குணசித்திர பாத்திரங்கள் என எல்லாப் பாத்திரங்களிலும் நாடகங்களில் நடித்துள்ளார்.

சுண்டுக்குளி யாழ்ப்பாண நாடகக் கலாமன்றத்தின் நீண்ட கால உறுப்பினராக இருந்து பெண் பாத்திரங்களில் நடித்துப் பல சாதனைகளை நிகழ்த்திய இவர் மேற்படி நாடகமன்றத்தின் அடங்காப் பிடாரி என்னும் நகைசுவை நாடகத்தில் 1500தடவைகளுக்கு மேல் மேடையேறி நடித்துள்ளார். மேலும் பாமாவிஜயம், ஏழு பிள்ளை நல்லதங்காள், குற்றம் எங்கே போன்ற நாடகங்களையும் இவர் நடித்துள்ளார். 2008ஆம் ஆண்டு அல்வாய் சாமணந்துறை பாலவினாயகர் மீது இவர் எழுதிய திருப்பள்ளி எழுச்சி குறுந்தட்டு வெளியீட்டின் போது ஆலய நிர்வாகத்தினரால் இவர் பொன்னடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

வளங்கள்

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 168