ஆளுமை:பீதாம்பரம், இராசையா

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 01:38, 20 அக்டோபர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=பீதாம்பரம்,..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பீதாம்பரம், இராசையா
தந்தை இராசையா
பிறப்பு 1936.03.21
ஊர் குரும்பசிட்டி
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

இ.பீதாம்பரம் (1936.03.21 - ) யாழ்ப்பாணம் குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகக் கொண்ட நாடகக் கலைஞர். இவரது தந்தை இரசையா. யாழ்ப்பாண மாநகரசபை நூலகத்தில் கடமையாற்றி ஓய்வு பெற்ற இவர் வண்ணை கலைவாணர் நாடகமன்றத்தை உருவாக்கி அதன் மூலம் பல நாடகங்களை சமூகத்தின் முன் மேடையேற்றிய இவர் 1950ஆம் ஆண்டு நாடகத்துறையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

வீரமைந்தன், திப்புசுல்தான், சரியா தப்பா, இன்பக் கனவு, இடிந்த கோவில், மிஸ்டர் கந்தப்பு, பரியாரியார் பரமசிவம் ஆகிய நாடகங்களை நெறியாள்கை செய்ததோடு முக்கிய கதாநாயகன் பாத்திரத்தில் நடித்து இவர் தன் நடிப்பாற்றலை வெளிப்படுத்தியுள்ளார்.

இவரது நாடகக் கலை அனுபவங்களைப் பாராட்டி 1994ஆம் ஆண்டு அனைத்துலக எம்.ஜி.ஆர்.பேரவையினர் நடிகமாமணி என்ற பட்டத்தை வழங்கி கௌரவித்துள்ளனர். மேலும் 2005ஆம் ஆண்டு நல்லூர் பிரதேச செயலக கலாசாரப் பேரவை இவரின் கலைப்பணியைக் கௌரவித்து கலைஞானசுடர் பட்டம் வழங்கியது.

வளங்கள்

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 159