ஆளுமை:மங்கையற்கரசி, மனோகர்

நூலகம் இல் இருந்து
Meuriy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 03:56, 19 அக்டோபர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{ஆளுமை| பெயர்=மங்கையற்கர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் மங்கையற்கரசி மனோகர்

தந்தை=

பிறப்பு 1954.03.12
ஊர் கொக்குவில்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ம.மங்கையற்கரசி (1954.03.12 - ) யாழ்ப்பாணம் கொக்குவிலைப் பிறப்பிடமாகக் கொண்ட நடனக் கலைஞர். இவர் யழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியில் கல்வி பயின்றார். சிறுவயதிலிருந்தே நடனத்துறையில் நாட்டங்கொண்டு சங்கீத, நடன பாடசாலையில் தன்னை இணைத்துக் கொண்டு 15 வருடங்கள் சங்கீத, நடன ஆசிரியர் கீதாஞ்சலி வி.கே நல்லையாவின் நேரடிக் கண்காணிப்பில் பரத நாட்டியம், குச்சுப்புடி, செம்பு நடனம், முதலியவற்றை திறம்படக் கற்று தேர்ச்சி பெற்றார்.

இவர் 1970ஆம் ஆண்டு யாழ்ப்பாணக் கல்லூரியில் ஆசிரியராக இணைந்து கொண்டார். கல்லூரி கலை விழாக்களிலும், போட்டிகளிலும் இவரது மாணவ மாணவிகள் திறம்பட ஆடி பலரது பாராட்டுக்களையும் பெற்றுக் கொண்டனர்.

இவரது திறமையைக் கண்ட கொக்குவில் கலைவாணி சனசமூக நிலையம் பரதவாணி என்ற பட்டத்தை இவருக்கு வழங்கி கௌரவித்துள்ளது. அக் கால கட்டத்திலே கொட்டடி கிராம அபிவிருத்திச் சங்கம் தனது ஆண்டு விழாவின் போது சமூக திலகம் என்ற விருது வழங்கி கௌரவித்தது. அத்தோடு இவரது திறமையைப் பாராட்டி இலங்கை குடியரசின் முதலாவது முன்னாள் தேசாதிபதி மேன்மை தங்கிய வில்லியம் கோபல்லாவ அவர்கள் தங்கப்பதக்கம் வழங்கி கௌரவித்தார். அதன் பின்னர் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த பிரதம மந்திரி சேர்.ஜோன்.கொத்தலாவல அவர்களும் சான்றிதழ் வழங்கி இவருக்கு புகழாரம் சூட்டினார். நல்லூர் பிரதேச கலாசாரப் பேரவையும் 2005ஆம் ஆண்டு நடைப்பெற்ற கலாசார விழாவில் இவருக்கு கலைஞானசுடர் வழங்கி கௌரவித்தது.

வளங்கள்

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 148