நிறுவனம்:யாழ்/ வேலணை சரவணை மேட்லீர் சிவன் கோயில்

நூலகம் இல் இருந்து
Thapiththa (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 06:02, 16 அக்டோபர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ("{{நிறுவனம்| பெயர்=யாழ்/ வே..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் யாழ்/ வேலணை சரவணை மேட்லீர் சிவன் கோயில்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் யாழ்ப்பாணம்
ஊர் சரவணை
முகவரி ஆத்தி சூடி வீதி, சரவணை சந்தி, வேலணை, யாழ்ப்பாணம்
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்

சரவணை மேட்லீர் சிவன் கோயில் இலங்கையின் வடக்கே யாழ்ப்பாண மாவட்டத்தில் வேலணை, சரவணையில் அமைந்துள்ளது. இவ் ஆலயத்தின் மூலஸ்தானத்தில் சிவலிங்கமூர்த்தி எழுந்தருளச்செய்யப்பட்டுள்ளது. இவ் ஆலயமானது 1902ம் ஆண்டில் தோற்றம் பெற்ற போதும் லிங்கம் எப்போது தோன்றியது என்பது யாருக்கும் தெரியாது.

மாடு மேய்க்கும் இளைஞனான கதிரவேலு மேய்ச்சலுக்கு சென்ற தனது மாடுகள் உரிய காலத்தில் வராததைக் கண்டு அவற்றைத் தேடிச் சென்ற போது ஆவாரம் பத்தைகள் இடையே பின்னிப்பிணைந்த நிலையில் நின்ற அரச மரத்தினதும், வேப்ப மரத்தினதும் அடியில் சிவலிங்கம் இருப்பதைக் கண்டு பெற்றோருக்கும் மற்றவர்களுக்கும் கூறிய போது அவர்களும் அதைக் கண்டு அவ்விடத்தைத் துப்பரவு செய்து ஒரு சிறிய கோயிலை அமைத்தனர். அம்மையப்பன் என்று பெயர் சூட்டி தினமும் பூசித்து வந்தனர். இக் கோவிலின் அண்மையில் குளம் ஒன்றும் அமைந்துள்ளது. இதனை வெட்டுக்குளம் என்றும் மக்கள் அழைப்பர்.

வளங்கள்

  • நூலக எண்: 5274 பக்கங்கள் 181-182