ஆளுமை:மார்க்கண்டு, இரத்தினம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் மார்க்கண்டு, இரத்தினம்
தந்தை இரத்தினம்
பிறப்பு 1947.10.24
ஊர் நல்லூர்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

இ. மார்க்கண்டு (1947.10.24 -) யாழ்ப்பாணம் நல்லூரைச் சேர்ந்த தவில் கலைஞர். இவரது தந்தை இரத்தினம். நல்லூர் ஸ்தான சி.சி.த.க. பாடசாலையில் ஆரம்பக் கல்வியையும், கைதடி சி.எம்.எஸ். ஆங்கிலப் பாடசாலையில் இடைநிலைக் கல்வியையும் பயின்றார். இவர் கைதடி கே. பழனிமலை அவர்களிடம் தவில் இசையைக் கற்றுக்கொண்டார்.

வண்ணை ஶ்ரீ வீரமாகாளி அம்மன் ஆலயம், நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனம், நல்லூர் பாணன்குளம் நாச்சியம்பாள் தேவஸ்தானம் ஆகியவற்றில் நீண்டகாலம் தவிலிசைத்துள்ளார். ஈழத்திருநாட்டின் பிரபல தவில் வித்துவானாக விளங்கும் இக் கலைஞர் தவிலிசை நுட்பங்களை இளஞ்சந்ததியினருக்கு கற்பித்துவருகின்றார்.

மலேசிய நாட்டில் சிவசுப்பிரமணியர் திருக்கோயில் தேவஸ்தானம் இவரை பாராட்டி 'தவில் ஞானச்சுடர்' என்ற பட்டத்தை வழங்கி கௌரவித்துள்ளது. இக் கலைஞருக்கு அவரது அளப்பறிய கலைச்சேவையைப் பாராட்டி இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் 2008ஆம் ஆண்டு கலாபூஷணம் விருது வழங்கி கௌரவித்துள்ளது.

வளங்கள்

  • நூலக எண்: 7571 பக்கங்கள் 110