ஆளுமை:திருஞானசம்பந்தன், இராசையா
பெயர் | திருஞானசம்பந்தன், இராசையா |
தந்தை | இராசையா |
பிறப்பு | 1946.07.04 |
ஊர் | திருநெல்வேலி |
வகை | கலைஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
இ.திருஞானசம்பந்தன் (1946.07.04 - ) யாழ்ப்பாணம் திருநெல்வேலியைச் சேர்ந்த பண்ணிசைக் கலைஞர். இவரது தந்தை இராசையா. இவர் தமிழகம் திருப்பணத்தாள் ஆதீனத்தில் பேராசிரியர் க.வெள்ளைவாரணன் அவர்களால் பரீட்சிக்கப்பட்டு தேவார இசைமணி பட்டம் பெற்று பல இடங்களில் பண்ணிசை வகுப்புக்களை நடாத்தி வந்ததோதோடு ஆலய ஆன்மீக விழாக்களிலும், பண்ணிசை ஓதுவராக விளங்கினார்.
நல்லை ஆதீனம், கைதடி ஶ்ரீ சச்சிதானந்த ஆச்சிரமம், திருவாடுதுறை ஆதீனம் ஆகியவை இவருக்கு பண்ணிசை வேந்தர், அருளிசை அரசு, தெய்வத் தமிழைச் செல்வர் போன்ற பட்டங்களை வழங்கி கௌரவித்துள்ளது. இவருடைய ஒலிப்பேழைகளிலுள்ள பாடல்களைக் கேட்டு இன்புற்ற திருக்கையிலாய பரம்பரை திருவாடுதுறை ஆதீன இருபத்து மூன்றாவது குருமகாசன்னிதானம் சிவப்பிரகாச தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் தமிழ்நாட்டிற்கு இவரை மும்முறை அழைத்து பாராட்டி பவித்திரம் அணிவித்து பொன்னாடை போர்த்தி குருமுதல்வர் ஆசிக்கவசம், பொற்கிளி ஆகியன அளித்து மகிழ்வித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கைத் திருநாட்டிலும், இந்தியா, மலேசியாவிலும் இவர் பல கௌரவ பட்டங்களைப் பெற்றதோடு அந் நாட்டுப் பக்க வாத்திய இசைக் கலைஞர்களுடன் பண்ணிசைக் கச்சேரிகளும் நிகழ்த்தியுள்ளார். இவருக்கு 2002ஆம் ஆண்டு இலங்கை அரசின் நீதி அமைச்சு சமாதான நீதவான் பட்டம் வழங்கியுள்ளது. இந்து சமய கலாசார அமைச்சு 2001ஆம் ஆண்டு கலைஞான கேசரி விருதினையும், இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் 2002ஆம் ஆண்டு கலாபூஷணம் விருதினையும் , திருமுருக கிருபானந்தவாரியால் 1984இல் திருமுருக வித்தகர் என்னும் பட்டமும் வழங்கி கௌரவிக்கப்பட்டார். 2005ஆம் ஆண்டு நல்லூர் கலாசாரப் பேரவை இவரின் கலைப்பணியைப் பாராட்டி கலைஞானச்சுடர் விருதினை வழங்கியுள்ளது.
வளங்கள்
- நூலக எண்: 7571 பக்கங்கள் 108